சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
பிரான்ஸில் வாகன சோதனையின் போது சிறுவன் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். இதை தொடர்ந்து அங்கு கலவரம் நடந்தது. இதுவரை 350 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கலவரக்காரர்கள் வாகனங்களுக்கு தீவைத்தல், கடைகளை சூறையாடுதல் போன்றவற்றில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுட்டேலா பாரிஸ் சென்றுள்ளார். அவர் இந்த கலவரத்தில் மாட்டிக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து ஊர்வசி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பாரிசில் நடந்து வரும் கலவரமும், வன்முறை சம்பவங்களும் கவலை அளிக்கிறது. பயமாகவும் இருந்தது. என்னுடன் வந்த குழுவினரின் பாதுகாப்பு நிலையை நினைத்து வருந்துகிறேன். இந்தியாவில் இருக்கும் எங்கள் குடும்பத்தினரும் எங்களின் பாதுகாப்பு குறித்து கவலைப்பட்டனர். நாங்கள் பாதுகாப்பாக இருக்க முடிந்தவரை முயற்சி செய்கிறோம். பாரிஸ் அழகான நாடு. இங்கு இப்படி வன்முறை சம்பவங்கள் நடப்பது கவலை அளிக்கிறது. இருப்பினும் தற்போது கலவரம் கட்டுக்குள் வந்துள்ளது'' என்று எழுதியிருக்கிறார்.