காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
தமிழ் சினிமாவின் சமீபத்திய நடிகர்களில் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் போன்றவர்கள் எந்தவித பின்புலமும் இல்லாமல் தன்னிச்சையாக போராடி வெற்றி பெற்றவர்கள். இவர்களில் விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். அதோடு ஹீரோ மட்டுமின்றி வில்லன் வேடங்களிலும் நடிப்பவர், சில படங்களில் வாய்ஸ் ஓவரும் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் படத்திலும் அவர் வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. அதில் அரசியல்வாதிகளை பார்த்து பயந்த நிலையில் இருக்கும் சிவகார்த்திகேயன், அடிக்கடி வானத்தை பார்க்கிறார். அப்போது அங்கிருந்து ஒரு குரல் கேட்கிறது. அது யாருடைய குரல் என்பது தெரியாமல் இருந்து வந்த நிலையில், தற்போது அது விஜய் சேதுபதியின் குரல் என்று ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வரும்போது, அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே அந்த குரலை தற்போதைக்கு சஸ்பென்ஸாக வைத்துள்ளார்களாம்.