மீண்டும் வில்லியாகும் பரீனா ஆசாத் | ‛எதிர்நீச்சல்-2 கிடையாது.. ஆனால்!..' : திருச்செல்வம் கொடுத்த சர்ப்ரைஸ் | விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து விட்டாரா விமல்? | சமந்தாவிடம் வருத்தம் தெரிவித்த டாக்டர்! | 'கேம் சேஞ்சர்' அப்டேட் கொடுத்த ஷங்கர் | காதலனை அறிமுகப்படுத்திய ஜெய்பீம் நடிகை ரஜிஷா | எஸ்.எஸ்.ராஜமவுலியின் வரலாற்று ஆவணப்படம்: நெட்பிளிக்சில் வெளியாகிறது | 'பவுண்ட் புட்டேஜ்' தொழில்நுட்பத்தில் உருவாகும் மஞ்சு வாரியர் படம் | விஜய் கட்சியில் சேரத் தயாராக இருக்கும் ராதாரவி | சந்தானத்தின் 'டிடி ரிட்டன்ஸ்' 2ம் பாகம்: ஆர்யா தயாரிக்கிறார் |
தமிழ் சினிமாவின் சமீபத்திய நடிகர்களில் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் போன்றவர்கள் எந்தவித பின்புலமும் இல்லாமல் தன்னிச்சையாக போராடி வெற்றி பெற்றவர்கள். இவர்களில் விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். அதோடு ஹீரோ மட்டுமின்றி வில்லன் வேடங்களிலும் நடிப்பவர், சில படங்களில் வாய்ஸ் ஓவரும் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் படத்திலும் அவர் வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. அதில் அரசியல்வாதிகளை பார்த்து பயந்த நிலையில் இருக்கும் சிவகார்த்திகேயன், அடிக்கடி வானத்தை பார்க்கிறார். அப்போது அங்கிருந்து ஒரு குரல் கேட்கிறது. அது யாருடைய குரல் என்பது தெரியாமல் இருந்து வந்த நிலையில், தற்போது அது விஜய் சேதுபதியின் குரல் என்று ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வரும்போது, அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே அந்த குரலை தற்போதைக்கு சஸ்பென்ஸாக வைத்துள்ளார்களாம்.