விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! | ‛சூர்யா 45' படத்தின் தலைப்பு இதுவா? | செப்டம்பரில் ‛வா வாத்தியார்' படத்தை வெளியிட திட்டம்! | ஹீரோவாக நடிக்கும் படத்திற்காக தற்காப்பு கலை பயிற்சி பெறும் லோகேஷ் கனகராஜ்! | தெலுங்கானா மாநில சினிமா விருதுகள்: நேரில் விருது பெற்ற அல்லு அர்ஜுன் | அப்பாவை அப்படி பார்த்தது மகிழ்ச்சி: கீர்த்திபாண்டியன் நெகிழ்ச்சி | கவிஞர்.நா.முத்துக்குமார் இசைச்கச்சேரி: கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் பங்கேற்பு | மணிரத்னத்தை மறுத்தாரா ரஜினி? | விரைவில் இயக்குனராகும் பார்த்திபன் மகன் ராதாகிருஷ்ணன் | தயாராகிறார் அடுத்த கேப்டன் |
மலையாளத்தில் நடிகர் சுரேஷ் கோபியின் மகன் கோகுல் சுரேஷ் ஹீரோவான அறிமுகமான 'முதுகாவ்' என்கிற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை அர்த்தனா பினு. இதைத்தொடர்ந்து தமிழுக்கு வந்த அர்த்தனா, சமுத்திரக்கனியின் தொண்டன், ஜிவி பிரகாஷ் உடன் செம ஆகிய படங்களில் நடித்தாார். கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்தில் அவரது முறைப்பெண்ணாக நடித்த போது ரசிகர்களால் பெரிதும் கவனிக்கப்பட்டு வரவேற்பை பெற்றார்.
இவர் மலையாள குணச்சித்திர நடிகரான விஜயகுமார் என்பவரின் மகள். ஆனால் இவரும், இவரது தாயும் விஜயகுமாரிடம் இருந்து கடந்த 10 வருடங்களாக பிரிந்து வாழ்கின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் தங்களது வீட்டுக்குள் தனது தந்தை விஜயகுமார் அத்துமீறி நுழைந்து தங்களை மிரட்டி சென்றதாக குற்றம் சாட்டியுள்ளார் அர்த்தனா பினு. இது பற்றி அவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் தன் தந்தை வந்து மிரட்டிச் சென்ற வீடியோவையும் பதிவிட்டு கூடவே உருக்கமான பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறும்போது, 'நடிகர் விஜயகுமார் என்னுடைய தந்தை தான். ஆனால் நானும் என் தாயும் அவரிடம் இருந்து 10 வருடங்களுக்கு முன்பு இருந்தே பிரிந்து வாழ்கிறோம். இப்போது இருக்கும் வீடு எங்களுக்கு சொந்தம் என நாங்கள் கொடுத்துள்ள வழக்கு தற்போது கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது. ஆனால் அவர் அவ்வப்போது வந்து எங்களை மிரட்டி செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். இப்போது கூட எங்கள் வீட்டின் கதவுகள் பூட்டி இருந்ததால் சுவர் ஏறிக்குதித்து வீட்டிற்குள்ளே வந்து திறந்திருந்த ஜன்னல் வழியாக எங்களை மிரட்டினார்.
குறிப்பாக நான் சினிமாவில் நடிக்க கூடாது என்றும் அப்படியே நடித்தாலும் அவர் சொல்லுகின்ற படங்களில் தான் நடிக்க வேண்டும் என்றும் மிரட்டினார். அதுமட்டுமல்ல எனது அம்மாவும் பாட்டியும் என்னை பணம் சம்பாதிப்பதற்காக நடிக்க வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள் என்றும் அபாண்டமாக பேசினார். நான் என்னுடைய விருப்பத்தின் பேரில், சினிமாவின் மீதான ஆர்வத்தின் காரணமாகத்தான் நடித்து வருகிறேன். பணத்திற்காக யாரும் என்னை நடிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தவில்லை. இவர் இப்படி அத்துமீறி நுழைவது குறித்து பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் அவர்கள் ஒருபோதும் எந்த நடவடிக்கையும் எடுத்தது இல்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர்” என்று கூறியுள்ளார்.