25 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு கம்பேக் தரும் சங்கீதா | சர்தார் 2 டப்பிங் பணிகளை தொடங்கிய கார்த்தி | ரம்பாவின் சொத்து மதிப்பு 2000 கோடி: தயாரிப்பாளர் தாணு தந்த தகவல் | ஸ்ரீதேவியின் 'மாம்' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் மகள் குஷி கபூர் | ஹிந்தியில் 'டாப் ஸ்டார்' ஆகும் ராஷ்மிகா மந்தனா | இளையராஜாவை தொடர்ந்து சிம்பொனியை அரங்கேற்றும் லிடியன் நாதஸ்வரம் | நீண்ட நாள் நண்பரை கை பிடிக்கும் அபிநயா | புதிய சீரியலில் மான்யா ஆனந்த் | மீண்டும் வெளியாகும் பாஸ் என்கிற பாஸ்கரன் | போதை பொருள் விளம்பரம் : ஷாருக்கான், அஜய் தேவ்கான் ஆஜராக நுகர்வோர் கமிஷன் உத்தரவு |
தெலுங்கு நடிகர் ரவி தேஜா தற்போது , ஈகிள், டைகர் நாகேஸ்வர ராவ் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து நடிக்க கதைகளை கேட்டு வருகிறார். அந்த வகையில் கலர் போட்டோ பட இயக்குனர் சந்தீப் ராஜ் இயக்கத்தில் ரவி தேஜா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை மல்டி ஸ்டார் படமாக உருவாக்க திட்டமிட்டுள்ளனர். அதனால் தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் இளம் ஹீரோ விஷ்வாக் சென் இந்த படத்தில் மற்றொரு ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இவர் அல்லாமல் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் மஞ்சு மனோஜ் உடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த படம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள் .