பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! |
தெலுங்கு நடிகர் ரவி தேஜா தற்போது , ஈகிள், டைகர் நாகேஸ்வர ராவ் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து நடிக்க கதைகளை கேட்டு வருகிறார். அந்த வகையில் கலர் போட்டோ பட இயக்குனர் சந்தீப் ராஜ் இயக்கத்தில் ரவி தேஜா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை மல்டி ஸ்டார் படமாக உருவாக்க திட்டமிட்டுள்ளனர். அதனால் தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் இளம் ஹீரோ விஷ்வாக் சென் இந்த படத்தில் மற்றொரு ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இவர் அல்லாமல் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் மஞ்சு மனோஜ் உடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த படம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள் .