ஆதங்கப்பட்ட அனுபமா பரமேஸ்வரன்... : சமாதானப்படுத்திய சுரேஷ் கோபி | நடிகை காவ்யா மாதவனின் தந்தை காலமானார் | 39வது பிறந்தநாள் கொண்டாடிய அஞ்சலி | அரசியல் என்ட்ரி : இளம் நடிகை அனந்திகாவின் ஆசை | அடுத்தடுத்து மூன்று பான் இந்தியா படங்களின் முன்னோட்ட வீடியோ போட்டி | மீண்டும் திரைக்கு வருகிறது அருண் விஜய்யின் “தடையறத் தாக்க” | விஜய் சேதுபதி படத்தில் சம்யுக்தா | 'தி ராஜா சாப்' டீசர் : தன் முந்தைய சாதனையை முறியடிக்காத பிரபாஸ் | நா.முத்துக்குமாருக்கு கரும்பு பிடிக்காதது ஏன் | ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாக போகும் படங்கள் |
பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பசுபதி, பார்வதி, மாளவிகா மோகன் உட்பட பலரது நடிப்பில் உருவாகி வரும் படம் தங்கலான். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இன்னும் பத்து நாட்களில் இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் துவங்கும் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஒரு தகவல் வெளியிட்டு இருக்கிறார்.
அவர் மேலும் கூறுகையில், தங்கலான் படத்தை உலகத்தரம் வாய்ந்த ஒரு படமாக உருவாக்கி வருகிறோம். விக்ரம் உள்ளிட்ட இப்படத்தில் நடிக்கும் அனைவருமே கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அதனால் இந்த படத்தை ஆஸ்கருக்கு எடுத்துச் செல்ல தேவையான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.