துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பசுபதி, பார்வதி, மாளவிகா மோகன் உட்பட பலரது நடிப்பில் உருவாகி வரும் படம் தங்கலான். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இன்னும் பத்து நாட்களில் இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் துவங்கும் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஒரு தகவல் வெளியிட்டு இருக்கிறார்.
அவர் மேலும் கூறுகையில், தங்கலான் படத்தை உலகத்தரம் வாய்ந்த ஒரு படமாக உருவாக்கி வருகிறோம். விக்ரம் உள்ளிட்ட இப்படத்தில் நடிக்கும் அனைவருமே கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அதனால் இந்த படத்தை ஆஸ்கருக்கு எடுத்துச் செல்ல தேவையான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.