சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
மிஷ்கின் இயக்கிய 'முகமூடி' படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அந்த படம் தோல்வி அடைந்ததால் தொடர்ந்து தமிழில் வாய்ப்பு கிடைக்காமல் தெலுங்கு பக்கம் சென்றார். அங்கு முன்னணி நடிகை ஆனர். இந்தி படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். தமிழுக்கு மீண்டும் வந்து விஜய் ஜோடியாக 'பீஸ்ட்' படத்தில் நடித்தார். தற்போது தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தெலுங்கில் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் 'குண்டூர் காரம்' என்ற படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமானார். இதில் மற்றொரு ஹீரோயினாக ஸ்ரீலீலா நடிக்கிறார். திடீரென்று அந்தப் படத்தில் இருந்து பூஜா ஹெக்டே விலகி விட்டதாக கூறப்படுகிறது. பூஜாவின் சமீபகால படங்கள் பெரிய வெற்றி பெறவில்லை. மேலும் அவர் அதிக சம்பளம் கேட்கிறார் என்றும், கால்ஷீட் பிரச்னையாலும் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது பூஜா ஹெக்டேவுக்கு பதிலாக சம்யுக்தா நடிப்பார் என்று தெரிகிறது.
தற்போது மகேஷ் பாபு படத்தில் இருந்து விலகியது தொடர்பாக பூஜா ஹெக்டே கூறியிருப்பதாவது: தெலுங்கில் மகேஷ் பாபு நடிக்கும் 'குண்டூர் காரம்' படத்தில் நடிக்க நான் ஒப்பந்தமானது உண்மை. ஆனால், படப்பிடிப்பு தொடங்க தாமதமான நிலையில்தான் என்னால் அந்தப் படத்தில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. காரணம், ஏற்கனவே நான் மற்ற படங்களுக்கு கொடுத்திருந்த கால்ஷீட்டில் பிரச்னை ஏற்பட்டது. எனவேதான் 'குண்டூர் காரம்' படத்திலிருந்து நானாகவே விலகிவிட்டேன்” என்று கூறியிருக்கிறார்.