AA26 - A6, இத்தனை கோடி பட்ஜெட்டா : உலா வரும் தகவல் | பெண் சாமியார் வேடத்தில் தமன்னா : ஒடேலா 2 டிரைலர் வெளியானது | ஜனநாயகன் படத்துடன் வெளியாகும் ஜூனியர் என்டிஆரின் 31வது படம் | அல்லு அர்ஜுனின் அபார வளர்ச்சி : சமந்தா வெளியிட்ட பதிவு | அஜித் பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் | நடிகர் 'லொள்ளு சபா' ஆண்டனி காலமானார் | டிடி நெக்ஸ்ட் லெவல் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு | மகிழ்ச்சியே வாழ்க்கைக்கு சிறந்த மருந்து : ரகுல் பிரீத் சிங் | ஏப்., 18ல் ரெட்ரோ இசை வெளியீடு | சர்வதேச சினிமா தொழில்நுட்ப கண்காட்சியில் கமல் |
‛பத்து தல' படத்தை அடுத்து ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்கிறார் சிம்பு. இந்த படத்துக்காக சில போர் பயிற்சிகளை பெறுவதற்காக அவர் லண்டன் சென்றிருக்கிறார். மேலும், இந்த படத்தை அடுத்து சிம்பு நடிக்கும் 49வது படத்தை போர் தொழில் படத்தின் இயக்குனர் விக்னேஷ் ராஜ் இயக்குவதாக கூறப்படும் நிலையில், அதன் பிறகு சிம்பு நடிக்கும் ஐம்பதாவது படத்தை மணிரத்னம் இயக்குவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அந்த படத்தையும் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ்தான் தயாரிக்கிறது. இதற்கு முன்பு மணிரத்னம் இயக்கிய செக்கச் சிவந்த வானம் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்த சிம்பு, கமலின் 234வது படத்தை மணிரத்னம் இயக்கி முடித்த பிறகு அவரது இயக்கத்தில் மீண்டும் நடிக்க போகிறார். இது சிம்புவின் 50வது படம் என்பதால் இப்படத்துக்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கிறது.