ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் |
‛பத்து தல' படத்தை அடுத்து ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்கிறார் சிம்பு. இந்த படத்துக்காக சில போர் பயிற்சிகளை பெறுவதற்காக அவர் லண்டன் சென்றிருக்கிறார். மேலும், இந்த படத்தை அடுத்து சிம்பு நடிக்கும் 49வது படத்தை போர் தொழில் படத்தின் இயக்குனர் விக்னேஷ் ராஜ் இயக்குவதாக கூறப்படும் நிலையில், அதன் பிறகு சிம்பு நடிக்கும் ஐம்பதாவது படத்தை மணிரத்னம் இயக்குவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அந்த படத்தையும் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ்தான் தயாரிக்கிறது. இதற்கு முன்பு மணிரத்னம் இயக்கிய செக்கச் சிவந்த வானம் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்த சிம்பு, கமலின் 234வது படத்தை மணிரத்னம் இயக்கி முடித்த பிறகு அவரது இயக்கத்தில் மீண்டும் நடிக்க போகிறார். இது சிம்புவின் 50வது படம் என்பதால் இப்படத்துக்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கிறது.