காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
‛பத்து தல' படத்தை அடுத்து ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்கிறார் சிம்பு. இந்த படத்துக்காக சில போர் பயிற்சிகளை பெறுவதற்காக அவர் லண்டன் சென்றிருக்கிறார். மேலும், இந்த படத்தை அடுத்து சிம்பு நடிக்கும் 49வது படத்தை போர் தொழில் படத்தின் இயக்குனர் விக்னேஷ் ராஜ் இயக்குவதாக கூறப்படும் நிலையில், அதன் பிறகு சிம்பு நடிக்கும் ஐம்பதாவது படத்தை மணிரத்னம் இயக்குவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அந்த படத்தையும் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ்தான் தயாரிக்கிறது. இதற்கு முன்பு மணிரத்னம் இயக்கிய செக்கச் சிவந்த வானம் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்த சிம்பு, கமலின் 234வது படத்தை மணிரத்னம் இயக்கி முடித்த பிறகு அவரது இயக்கத்தில் மீண்டும் நடிக்க போகிறார். இது சிம்புவின் 50வது படம் என்பதால் இப்படத்துக்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கிறது.