அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
தமிழ் சினிமாவில் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை பாலாம்பிகா. இவர் பழம்பெரும் இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனிடம் உதவியாளராக இருந்த ராமசாமி என்பரின் மகள். இவர் ‛பாலம்' என்ற படத்தில் முரளிக்கு தங்கையாக நடித்து அறிமுகமானார். இப்படத்தில் கண் பார்வை தெரியாத தங்கையாக நடித்திருந்தார். அதன்பிறகு ‛நடிகன்' படத்தில் குஷ்புவுக்கு தங்கையாக நடித்தார். ‛பாட்டுக்கு ஒரு தலைவன்' என்ற படத்தில் விஜயகாந்த் தங்கையாகவும், ‛திருமதி பழனிச்சாமி' என்ற படத்தில் சத்யராஜுக்கு தங்கையாகவும் நடித்துள்ளார்.
பின்னர் சின்னத்திரை பக்கம் திரும்பிய பாலாம்பிகா, பல சீரியல்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் அதிர்ச்சி தரக்கூடிய தகவலை அளித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், ‛‛அட்ஜெஸ்ட்மென்ட் செய்தால் விஜய்க்கு ஜோடியாக நடிக்கலாம் என்று சொன்னார்கள். அதில் உடன்பாடு இல்லை. அதுவும் இல்லாமல் என் அப்பாவுக்கும் இதில் உடன்பாடில்லை. இப்படி சென்றால் தான் வாய்ப்பு கிடைக்கும் என்றால் அந்த வாய்ப்பு நமக்கு தேவையில்லை என அப்பா சொல்லிவிட்டார். விஜய் உடன் நான் நடித்திருந்தால் தற்போது என் வாழ்க்கை மாறியிருக்கும்.
எனது திருமண வாழ்க்கையும் ஒழுங்காக அமையவில்லை. கணவர் சரியில்லை. அதனால் திருமண வாழ்க்கையை முடித்துக்கொண்டேன். நான் பல நாடுகளுக்கு சுற்றியிருக்கிறேன். நன்றாக சம்பாதித்தபோது கொஞ்சம் அதிகமாகவே ஆடிவிட்டேன். அதனால் அனைத்தையும் இழந்துவிட்டேன். கொரோனா சமயத்தில் கஷ்டப்பட்டபோது நடிகர் சத்யராஜை தொடர்புகொண்டு உதவி கேட்டேன். அவர் என்னை வீட்டுக்கு அழைத்து 20 ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவினார். விஜயகாந்தை என்னால் தொடர்புகொள்ள முடியவில்லை. இவ்வாறு கூறினார்.
பாலாம்பிகாவின் இந்த பேட்டி, தமிழ் திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.