துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
பாலிவுட் இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில், தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில், ராமாயணத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள ஆதிபுருஷ் படம், கடந்த 16ம் தேதி நாடு முழுதும் வெளியானது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி உள்ள இப்படம், கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. படத்தில் ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் சில வசனங்கள் இடம் பெற்றுள்ளதாக, படத்தை பார்த்தவர்கள் சமூக ஊடகங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
இது குறித்து படத்தின் வசனகர்த்தா மனோஜ் முன்டாஷிர் சுக்லா நேற்று கூறுகையில், 'என்னைப் பொறுத்தவரை ரசிகர்களின் உணர்வுகளை விட பெரியது எதுவுமில்லை. நான் எழுதிய வசனங்களை நியாயப்படுத்த முடியும், ஆனால் அது, உங்கள் வலியைக் குறைக்காது. உங்கள் உணர்வுகளை புண்படுத்தும் வசனங்களை திருத்துவது என, நானும், படத் தயாரிப்பாளரும், இயக்குனரும் முடிவு செய்துள்ளோம். திருத்தப்பட்ட வசனங்கள், இந்த வாரம் படத்தில் சேர்க்கப்படும்' என்றார்.
இந்த நிலையில் மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில், ''சிபிஎப்சி (சென்சார் வாரியம்) இது குறித்து முக்கிய முடிவெடுத்துள்ளது. யாருடைய மனதையும் புண்படுத்த யாருக்கும் உரிமை இல்லை. கண்டனத்தை எழுப்பி உள்ள வசனங்களை நீக்குவது குறித்து, இயக்குனருடன் பேச்சுவார்த்தை நடந்துள்ளது'' எனக் கூறினார்.