ஷாருக்கானை வைத்து அலைபாயுதே திட்டம்! - மணிரத்னம் | தெலுங்குத் திரையுலகினர் மீது பவன் கல்யாண் கோபம் | கலாம் கதையை படமாக்குவது சவால்: இயக்குனர் ஓம் ராவத் | அரசியல் சீன், டயலாக் உருவாக்கி கொடுத்த நடிகர் | ரோஜாஸ்ரீயின் அழகு ரகசியம் | ‛‛கமல் ஒரு ஏணி; அவரை மதித்து மேலே செல்வேன், மிதித்து அல்ல'': சிம்பு | 'கேம் சேஞ்ஜர்' அனுபவம் ஒரு 'பயங்கரம்' - விலகிய எடிட்டர் பேச்சு | பிளாஷ்பேக்: மலைக்க வைக்கும் 50வது ஆண்டில் “மயங்குகிறாள் ஒரு மாது” | ஜூன் மாதத்தில் ‛சர்தார் 2' படப்பிடிப்பு முடியும் ; மாளவிகா மோகனன் | காதலிக்க நேரமில்லை, தில், ராட்சசன் - ஞாயிறு திரைப்படங்கள் |
பிரபல திரைப்பட நடிகையான வினோதினி சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக அரசியல் சார்ந்த கருத்துகளை பேசி வருகிறார். இந்நிலையில், அவர் தற்போது கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியில் உறுப்பினராக இணைந்துள்ளார். இணைந்த பின் அவர் வெளியிட்ட முதல் பதிவிலேயே சில அரசியல் கட்சிகளை நாசூக்காக கலாய்த்துள்ளார்.
கடவுளுக்கும் அஞ்ஞானவதிக்கும் இடையே நடக்கும் உரையாடலாக அந்த பதிவை வெளியிட்டுள்ள வினோதினி, மதத்தின் அடிப்படையில் ஏன் கட்சியில் சேரவில்லை என்று கடவுள் கேட்க, அதற்கு வாரம் ஒருமுறை கள்ள ஆடியோ, வீடியோ ரெக்கார்டிங் செய்யும் கருவிகள் இருப்பதை கண்டுபிடிக்க காசு இல்லை என்று பதில் கூறியுள்ளார். அதேபோல் பகுத்தறிவு பேசுற கட்சியில் சேரலையா? என்று கடவுள் கேட்க. 'பகுத்தறிவா? அப்படினா என்னன்னு கேட்குறாங்க' என்று அந்த கட்சிக்காரர்களுக்கே பகுத்தறிவு இல்லை என கிண்டலடித்துள்ளார். இப்படியாக நீண்டுகொண்டே செல்லும் அந்த உரையாடலில் கடைசியில் மைய அரசியல் என்று குறிப்பிட்டு தான் மக்கள் நீதி மையம் கட்சியில் சேர்ந்திருப்பதை தெரிவித்துள்ளார். வினோதினியின் இந்த நக்கலான பதிவை படிக்கும் பலரும் ஆரம்பமே அமர்க்களமா? என ஜாலியாக கேட்டு வருகின்றனர்.