மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் சகோதர்களில் ஒருவர்தான் நடிகர் நாகபாபு. இவரது மகனும் இளம் நடிகருமான வருண் தேஜ் மற்றும் நடிகை லாவண்யா திரிபாதி இருவரும் காதலித்து வந்த நிலையில் இரு வீட்டினரின் சம்மதத்துடன் சமீபத்தில் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் விமர்சையாக நடைபெற்றது. இதில் சிரஞ்சீவி மற்றும் அல்லு அரவிந்த் குடும்பத்தை சேர்ந்த அனைவரும் கலந்து கொண்டனர். அதேசமயம் நாக பாபுவின் மகள் நிஹாரிகா கடந்த வருடம் திருமணம் ஆன நிலையில் கடந்த சில மாதங்களாகவே தனது கணவர் சைதன்யாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாக சொல்லப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த நிச்சயதார்த்த நிகழ்வுக்கு நிஹாரிகாவின் கணவர் கலந்து கொள்ளவில்லை. நிஹாரிக்காவின் கணவர் சைதன்யா இந்த நிகழ்வில் வேண்டுமென்றே கலந்து கொள்ளவில்லையா அல்லது அவருக்கு அழைப்பு அனுப்பப்பட்டதா? இல்லை இந்த கருத்து வேறுபாடு காரணமாக அவர் கலந்து கொள்ளவில்லையா என்பது தெரியவில்லை.. அதேசமயம் நிஹாரிகாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது என்பது இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.