பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
சுராஜ் இயக்கத்தில், இயக்குனர் சுந்தர் சி கதாநாயகனாக அறிமுகமான படம் 'தலைநகரம்'. 2006ம் ஆண்டில் வெளிவந்த அந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக வடிவேலுவின் நகைச்சுவையும் அமைந்தது. அப்படத்தில் கதாநாயகனாக சுந்தர் சியின் கதாபாத்திரமான 'ரைட்டு', கதாபாத்திரத்தை விட வடிவேலுவின் 'நாய் சேகர்' கதாபாத்திரம் மக்கள் மனதில் இடம் பிடித்தது.
17 வருடங்களுக்குப் பிறகு 'தலைநகரம்' படத்தின் இரண்டாம் பாகமான 'தலைநகரம் 2' வெளியாக உள்ளது. நேற்று இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்று டிரைலர் வெளியிடப்பட்டது. இரண்டாம் பாகத்தை விஇசட் துரை இயக்கியுள்ளார். சுந்தர் சி கதாநாயகனாக நடிக்க பாலக் லால்வானி, தம்பி ராமையா, பாகுபலி பிரபாகர் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
பல வன்முறைக் காட்சிகளுடன், கத்திக் குத்துக் காட்சிகளுடன், ரவுடிகளுக்கு இடையிலான மோதல் படமாக இப்படம் உருவாகியிருக்கும் என டிரைலரைப் பார்க்கும் போது தெரிகிறது. சில பெண்களின் ஆபாசமான காட்சிகளும் படத்தில் இருப்பதைப் பார்க்கும் போது 90களில் வர வேண்டிய படம் போலத் தெரிகிறது. மாறுபட்ட கதைகளுடன் கூடிய படங்கள் வந்து கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் இப்படியான படங்கள் எப்படிப்பட்ட வரவேற்பைப் பெறப் போகிறது என்பது விரைவில் தெரிந்துவிடும்.
'தலைநகரம்' முதல் பாகத்தில் வடிவேலுவின் நகைச்சுவையும் இருந்ததால் அப்படத்திற்கு அனைத்து தரப்பிலும் வரவேற்பு இருந்தது. இப்படத்தில் வடிவேலு நகைச்சுவை இல்லை என்றாலும் வேறு எந்த நகைச்சுவையும் இல்லாமல் டிரைலரின் ஆரம்பம் முதல் இறுதி வரை ரத்தம் மட்டுமே தெறிக்கிறது.