மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் ஹீரோவான சிரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின் மகன் வருண் தேஜ். அவரும் தெலுங்கில் இளம் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவருக்கும், நடிகை லாவண்யா திரிபாதிக்கும் இடையில் காதல் என கடந்த சில வாரங்களாகவே செய்திகள் வந்து கொண்டிருந்தன. இருவரது வீட்டாரும் திருமணம் குறித்து பேச்சு வார்த்தை நடத்தி முடித்ததாகவும் சொன்னார்கள்.
இந்நிலையில் நேற்று இரவு தனது சமூக வலைத்தளத்தில் லாவண்யாவுடன் இருக்கும் சில புகைப்படங்களைப் பகிர்ந்து 'எனது காதலைக் கண்டுபிடித்தேன்' என வருண் தேஜ் பதிவிட்டுள்ளார். நேற்று இரவு ஹைதராபாத்தில் உள்ள வருண் வீட்டில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. அதற்குப் பிறகே இந்தப் பதிவை வெளியிட்டுள்ளார் வருண்.
அப்பதிவை மறுபதிவு செய்து, “2016 முதல் என்றென்றைக்கும், எனக்கானவரைக் கண்டுபிடித்தேன்,” என லாவண்யா குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய திருமண நிச்சய நிகழ்வில் வருணின் பெரியப்பாவும், நடிகருமான சிரஞ்சீவியின் குடும்பத்தினரும், சித்தப்பாவும் நடிகருமான பவன் கல்யாண், சகோதரர் ராம் சரண் உள்ளிட்டோரும், அல்லு அர்ஜுன் குடும்பத்தினரும், லாவண்யா திரிபாதி குடும்பத்தினர் நெருங்கிய உறவினர்கள், நண்பர்களும் கலந்து கொண்டுள்ளனர்.