கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் | கதைநாயகன் ஆன பரோட்டா முருகேசன் | இந்த வார ரீ ரிலீஸில், 'அட்டகாசம், அஞ்சான்' | ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'பாகுபலி தி எபிக்' | 31 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸிற்கு தயாராகும் சுரேஷ் கோபியின் கமிஷனர் | பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு |

கடந்த 2018ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான படம் வட சென்னை. இந்த படத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, அமீர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குமாறு தனுஷின் ரசிகர்கள் தொடர்ந்து வெற்றிமாறனுக்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது வட சென்னை-2 படம் குறித்து தான் அளித்த பேட்டியில் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். அதில், வட சென்னை படத்தில் ராஜன் என்ற கதாபாத்திரத்தை மையப்படுத்தி ராஜன் வகையறா என்ற பெயரில் அதன் இரண்டாம் பாகத்தை இயக்கி வெளியிடுவதற்கு தயாராக வைத்திருக்கிறார் வெற்றிமாறன். இப்படம் தமிழ் சினிமாவின் சிறந்த படங்களில் ஒன்றாக கண்டிப்பாக இருக்கும். அந்த படத்தை அவர் சீக்கிரமே வெளியிட வேண்டும் என்றும் சந்தோஷ் நாராயணன் தெரிவித்திருக்கிறார்.