சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
மலையாளத்தில் வெளியான பிரேமம் என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாய்பல்லவி. அந்த ஒரே படத்தில் மிகப்பெரிய அளவில் பிரபலமான இவர் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். குறிப்பாக தெலுங்கில் அதிக அளவு படங்களில் நடித்துள்ள சாய் பல்லவிக்கு அங்கே மிகப்பெரிய ரசிகர் வட்டமே இருக்கிறது. இந்த நிலையில் இவரது அழகாலும் நடனத்தாலும் இவர் மீது மிகப்பெரிய அளவில் ஈர்ப்பில் இருக்கிறார் பாலிவுட் நடிகரான குல்ஷன் தேவய்யா என்பவர்.
கடந்த 13 ஆண்டுகளாக ஹிந்தியில் பல படங்களில் நடித்துள்ள குல்ஷன் தேவய்யா சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை சாய்பல்லவி பற்றி பேசும்போது, “சாய்பல்லவி மீது எனக்கு நீண்ட நாட்களாகவே மிகப்பெரிய அளவில் கிரஷ் இருக்கிறது. அவரது தொலைபேசி எண் கூட என்னிடம் இருக்கிறது. ஆனால் அவரை அணுகுவதற்கு என்னிடம் துணிச்சல் இல்லை. அவர் ஒரு அற்புதமான நடிகை மற்றும் டான்சர். இது வெறும் கிரஷ் மட்டும் என்றே நான் நினைக்கிறேன். அதைத்தாண்டி எதுவும் இல்லை. ஆனாலும் சில நேரங்களில் அவர் மீது அதிக அளவில் ஈர்க்கப்பட்டு விடுகிறேன். அவருடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன்” என்று கூறியுள்ளார்.
நடிகர் குல்ஷன் தேவய்யா ஏற்கனவே திருமணமாகி 8 வருட மண வாழ்க்கைக்கு பிறகு கடந்த 2020ல் தனது மனைவியை பிரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.