மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
மலையாளத்தில் வெளியான பிரேமம் என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாய்பல்லவி. அந்த ஒரே படத்தில் மிகப்பெரிய அளவில் பிரபலமான இவர் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். குறிப்பாக தெலுங்கில் அதிக அளவு படங்களில் நடித்துள்ள சாய் பல்லவிக்கு அங்கே மிகப்பெரிய ரசிகர் வட்டமே இருக்கிறது. இந்த நிலையில் இவரது அழகாலும் நடனத்தாலும் இவர் மீது மிகப்பெரிய அளவில் ஈர்ப்பில் இருக்கிறார் பாலிவுட் நடிகரான குல்ஷன் தேவய்யா என்பவர்.
கடந்த 13 ஆண்டுகளாக ஹிந்தியில் பல படங்களில் நடித்துள்ள குல்ஷன் தேவய்யா சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை சாய்பல்லவி பற்றி பேசும்போது, “சாய்பல்லவி மீது எனக்கு நீண்ட நாட்களாகவே மிகப்பெரிய அளவில் கிரஷ் இருக்கிறது. அவரது தொலைபேசி எண் கூட என்னிடம் இருக்கிறது. ஆனால் அவரை அணுகுவதற்கு என்னிடம் துணிச்சல் இல்லை. அவர் ஒரு அற்புதமான நடிகை மற்றும் டான்சர். இது வெறும் கிரஷ் மட்டும் என்றே நான் நினைக்கிறேன். அதைத்தாண்டி எதுவும் இல்லை. ஆனாலும் சில நேரங்களில் அவர் மீது அதிக அளவில் ஈர்க்கப்பட்டு விடுகிறேன். அவருடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன்” என்று கூறியுள்ளார்.
நடிகர் குல்ஷன் தேவய்யா ஏற்கனவே திருமணமாகி 8 வருட மண வாழ்க்கைக்கு பிறகு கடந்த 2020ல் தனது மனைவியை பிரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.