25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
மலையாளத்தில் வெளியான பிரேமம் என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாய்பல்லவி. அந்த ஒரே படத்தில் மிகப்பெரிய அளவில் பிரபலமான இவர் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். குறிப்பாக தெலுங்கில் அதிக அளவு படங்களில் நடித்துள்ள சாய் பல்லவிக்கு அங்கே மிகப்பெரிய ரசிகர் வட்டமே இருக்கிறது. இந்த நிலையில் இவரது அழகாலும் நடனத்தாலும் இவர் மீது மிகப்பெரிய அளவில் ஈர்ப்பில் இருக்கிறார் பாலிவுட் நடிகரான குல்ஷன் தேவய்யா என்பவர்.
கடந்த 13 ஆண்டுகளாக ஹிந்தியில் பல படங்களில் நடித்துள்ள குல்ஷன் தேவய்யா சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை சாய்பல்லவி பற்றி பேசும்போது, “சாய்பல்லவி மீது எனக்கு நீண்ட நாட்களாகவே மிகப்பெரிய அளவில் கிரஷ் இருக்கிறது. அவரது தொலைபேசி எண் கூட என்னிடம் இருக்கிறது. ஆனால் அவரை அணுகுவதற்கு என்னிடம் துணிச்சல் இல்லை. அவர் ஒரு அற்புதமான நடிகை மற்றும் டான்சர். இது வெறும் கிரஷ் மட்டும் என்றே நான் நினைக்கிறேன். அதைத்தாண்டி எதுவும் இல்லை. ஆனாலும் சில நேரங்களில் அவர் மீது அதிக அளவில் ஈர்க்கப்பட்டு விடுகிறேன். அவருடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன்” என்று கூறியுள்ளார்.
நடிகர் குல்ஷன் தேவய்யா ஏற்கனவே திருமணமாகி 8 வருட மண வாழ்க்கைக்கு பிறகு கடந்த 2020ல் தனது மனைவியை பிரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.