கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
நடிகர் துருவ் விக்ரம் ஆதித்யா வர்மா படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். அதை தொடர்ந்து மகான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். விரைவில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார் .இந்த படத்தில் அவர் கபடி வீரராக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து தற்போது ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார் துருவ். அதன்படி, டாடா பட இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். மாரி செல்வராஜ் படத்தை முடித்தவுடன் துருவ் விக்ரம் இந்த படத்தில் நடிப்பார் என்கிறார்கள். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.