எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
பத்து தல படத்தை அடுத்து கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் தனது 48வது படத்தில் நடிக்கப் போகிறார் சிம்பு. இந்த படத்தை துல்கர் சல்மான் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். சரித்திர கால கதையில் தயாராகும் இப்படத்தில் போர் வீரராக நடிக்கும் சிம்பு அதற்கான பயிற்சியையும் மேற்கொண்டு வருகிறார். மேலும் தனது கதாபாத்திரத்திற்காக நீண்ட தலை முடியையும் வளர்த்து வருகிறார்.
இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிப்பதாக முதலில் செய்தி வெளியானது. அதையடுத்து கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது சிம்புவின் 48வது படத்தில் அவருக்கு ஜோடியாக திஷா பதானி நடிப்பதாக கூறப்படுகிறது. பாலிவுட் நடிகையான இவர் தற்போது சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் கங்குவா படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.