திருப்பதி அடிவாரத்தில் நடுரோட்டில் பிச்சை எடுக்க வைத்து விட்டார் சேகர் கம்முலா! வைரலாகும் தனுஷின் வீடியோ | ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்! | கவர்ச்சிக்கு நோ சொல்லும் ரக்ஷிதா | மலேசியாவில் ஓய்வெடுக்கும் பாரதிராஜா | நெல் ஜெயராமன் மகனுக்கு உதவும் சிவகார்த்திகேயன் | ஆசியாவிலேயே மிகப்பெரிய செட் எது தெரியுமா? | விறுவிறுப்பாக நடந்து வரும் 'கூலி' வியாபாரம் | 'தக் லைப்' விவகாரம் : கன்னட அமைப்புகளுக்கு கர்நாடக துணை முதல்வர் வேண்டுகோள் | அதர்வாவுக்கு திருப்பத்தைத் தருமா 'டிஎன்ஏ'? | விமர்சனங்களால் கவலையில்லை.. கடைசி காலத்தில் இதை பார்த்து மகிழ்வேன் : அஜித் பேட்டி |
கேன்ஸ் திரைப்பட விழா மும்முரமாக நடந்து வருகிறது. அதில் இந்திய நடிகைகள் விதவிதமான ஆடைகள், அணிகலன்கள் அணிந்து கலந்து கொண்டு வருகிறார்கள். அந்த வரிசையில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா பிங்க் கலர் கவுண் அணிந்து காட்சி அளித்ததுடன் அவர் அணிந்திருந்த முதலை வடிவ நெக்லஸ் அனைவர் கவனத்தையும் ஈர்த்தது.
இந்நிலையில் நகை நிபுணரான அருந்ததி ஷேத் என்பவர் ஊர்வசி ரவுத்தேலா அணிந்திருந்த நெக்லஸ் போலி என தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் “இந்த லுக்கை பார்த்து நான் குழம்பியிருக்கிறேன். அவர் கார்டியரின் ஒரிஜினல் மரியா பெலிக்ஸ் முதலை நெக்லஸா அணிந்திருக்கிறார்? பிரான்ஸில் இருக்கும் கேன்ஸுக்கு சென்றிருக்கிறீர்கள். அதுதான் கார்டியரின் சொந்த நாடு. வரலாற்று சிறப்புமிக்க நகையின் போலியை அணிவது. வெட்கமாக இருக்கிறது. நம் நாட்டில் ஸ்பெஷலான பொக்கிஷங்கள், நகைகள் இருக்கிறது. அதை அவர் அணிந்திருக்கலாம். என்றார்.
இதுகுறித்து ஊர்வசி ரவுத்தேலா தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ஊர்வசி ரவுத்தேலா அணிந்திருந்த ஒரிஜினல் முதலை நெக்லஸின் விலை 200 கோடியில் இருந்து 276 கோடியாக உயர்ந்துவிட்டது. அவர் நிஜமான நகையே அணிந்திருந்தார். என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.