ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? | தோத்துகிட்டேபோனா எப்படி : எப்பதான் ஜெயிக்கிறது | தாத்தா பெயரை காப்பாற்றுவேன்: நாகேஷ் பேரன் உருக்கம் | எனது முத்தக் காட்சியை எப்படி நீக்கலாம் : பாலிவுட் நடிகை கண்டனம் | ரஞ்சித், ஆர்யா படப்பிடிப்பில் சண்டை கலைஞர் மரணம் |
லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வரும் விஜய், அதையடுத்து வெங்கட் பிரபு இயக்கும் தனது 68 வது படத்தில் நடிக்கப் போகிறார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜய் நடித்த குஷி படத்தை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா, அதன் பிறகு அவர் நடித்த நண்பன், மெர்சல், வாரிசு போன்ற படங்களில் நடித்து இருக்கிறார். இதில், மெர்சல் படத்தில் வில்லனாக நடித்தார். பின்னர் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு படத்திலும் வில்லனாக நடித்த எஸ்.ஜே.சூர்யா, தற்போது மார்க் ஆண்டனி, கேம் சேஞ்சர், ஜிகர்தண்டா-2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் விஜய்யின் 68வது படத்திலும் அவரை வில்லனாக நடிக்க வைக்க அவரிடத்தில் வெங்கட் பிரபு பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.