நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் | எட்டு நாளில் 120 கோடி வசூலித்த லோகா சாப்டர் 1 சந்திரா | ஆக்ஷன் மோடில் தோனி மற்றும் மாதவன் ; விளம்பரத்திற்காகவா ? | 2ம் பாகத்திற்கு கதை எழுதுகிறேன் : தொடரும் பட இயக்குனர் வைத்த சஸ்பென்ஸ் | இரண்டு படங்கள் தொடர் தோல்வி : 2025ல் வெற்றி கணக்கை துவங்காத பஹத் பாசில் | இருவரைக் காப்பாற்றி மீட்டெத்த 'மதராஸி' | செப்டம்பர் 12ல் 8 படங்கள் ரிலீஸ் | நடிகைகளை வைத்து பாலியல் தொழில் : பாலிவுட் நடிகை கைது |
லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வரும் விஜய், அதையடுத்து வெங்கட் பிரபு இயக்கும் தனது 68 வது படத்தில் நடிக்கப் போகிறார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜய் நடித்த குஷி படத்தை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா, அதன் பிறகு அவர் நடித்த நண்பன், மெர்சல், வாரிசு போன்ற படங்களில் நடித்து இருக்கிறார். இதில், மெர்சல் படத்தில் வில்லனாக நடித்தார். பின்னர் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு படத்திலும் வில்லனாக நடித்த எஸ்.ஜே.சூர்யா, தற்போது மார்க் ஆண்டனி, கேம் சேஞ்சர், ஜிகர்தண்டா-2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் விஜய்யின் 68வது படத்திலும் அவரை வில்லனாக நடிக்க வைக்க அவரிடத்தில் வெங்கட் பிரபு பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.