கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் | இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் |
சென்னை 28, சரோஜா, மங்காத்தா, மாநாடு என பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் வெங்கட்பிரபு. அதே சமயம், இவர் இயக்கிய மாஸ், பிரியாணி போன்ற படங்கள் தோல்வியும் அடைந்தன. மாநாடு படத்துக்கு பிறகு தமிழ் , தெலுங்கில் நாகசைதன்யா நடிப்பில் அவர் இயக்கிய கஸ்டடி மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே கடந்த 12ம் தேதி திரைக்கு வந்தது. ஆனால் கலவையான விமர்சனங்களை சந்தித்த இந்த படம் திரைக்கு வந்து 6 நாட்களில் இதுவரை 10 கோடி ரூபாய் கூட வசூலிக்க வில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த வகையில், தமிழ் இயக்குனர் லிங்குசாமி தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிப்பில் போலீஸ் கதையில் இயக்கிய தி வாரியர் படத்தைப் போலவே, இன்னொரு தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை வைத்து போலீஸ் கதையில் வெங்கட் பிரபு இயக்கி உள்ள இந்த கஸ்டடி படமும் எதிர்பார்த்தபடி வெற்றி பெறாமல் அதிர்ச்சி தோல்வி அடைந்து இருக்கிறது. அதோடு இந்த இரண்டு படங்களிலுமே நாயகியாக நடித்தவர் கிர்த்தி ஷெட்டி என்பது குறிப்பிடத்தக்கது. கஸ்டடி படம் நிச்சயம் பெரியளவில் நஷ்டத்தை சந்திக்கும் என்கிறார்கள்.