அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
காக்கா முட்டை என்ற படத்தின் மூலம் பிரபலமான ஐஸ்வர்யா ராஜேஷ், அதன் பிறகு விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார். தற்போது பல படங்களில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார். அவரது நடிப்பில் பர்ஹானா என்ற படம் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் அளித்த ஒரு பேட்டியில், புஷ்பா படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்த ஸ்ரீ வள்ளி கேரக்டரில் நான் நடித்திருந்தால் அவரைவிட சிறப்பாக நடித்திருப்பேன் என்று கூறியதாக செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் தற்போது தான் அப்படி சொல்லவே இல்லை என அது குறித்து ஒரு விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
அந்த அறிக்கையில், சமீபத்தில் ஒரு நேர்காணலின்போது தெலுங்கு சினிமாவில் எந்த மாதிரியான வேடங்களில் நடிக்க விரும்புகிறீர்கள்? என்று என்னிடத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு, எனக்கு தெலுங்கு சினிமா ரொம்ப பிடிக்கும். எனக்கு விருப்பமான கதாபாத்திரங்கள் கிடைத்தால் நிச்சயமாக நடிப்பேன். உதாரணத்துக்கு புஷ்பா படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்த ஸ்ரீ வள்ளி கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று தான் பதில் கொடுத்திருந்தேன். என்றாலும் துரதிஷ்டவசமாக என்னுடைய பதில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அந்த இடத்தில் அவரை விட நான் நடித்திருந்தால் சிறப்பாக நடித்து இருப்பேன் என்று நான் கூறியது போல் இந்த செய்தி வெளியாகி உள்ளது.
ஆனால் நான் அந்த அர்த்தத்தில் அதற்கான பதிலை சொல்லவில்லை என்று கூறி இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், புஷ்பா படத்தில் நடித்த ராஷ்மிகாவின் கடின உழைப்பை ஒருபோதும் நான் குறை கூறவில்லை. அதனால் அந்த குழப்பத்தை போக்குவதற்காகவே இந்த விளக்கத்தை அளிக்கிறேன். ராஷ்மிகா மீதும், அவரது நடிப்பின் மீதும் எனக்கு பெரிய அளவில் மரியாதை உண்டு என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன் . அதனால் மீடியாக்கள் தொடர்ந்து நான் சொன்ன பதிலை தவறான கோணத்தில் வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.