Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராஷ்மிகா குறித்து அப்படி சொல்லவே இல்லை! - ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம்!!

18 மே, 2023 - 11:13 IST
எழுத்தின் அளவு:
Aishwarya-Rajesh-clarifies-she-has-'profound-admiration'-for-Rashmika's-work-after-Pushpa's-Srivalli-statement

காக்கா முட்டை என்ற படத்தின் மூலம் பிரபலமான ஐஸ்வர்யா ராஜேஷ், அதன் பிறகு விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார். தற்போது பல படங்களில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார். அவரது நடிப்பில் பர்ஹானா என்ற படம் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் அளித்த ஒரு பேட்டியில், புஷ்பா படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்த ஸ்ரீ வள்ளி கேரக்டரில் நான் நடித்திருந்தால் அவரைவிட சிறப்பாக நடித்திருப்பேன் என்று கூறியதாக செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் தற்போது தான் அப்படி சொல்லவே இல்லை என அது குறித்து ஒரு விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
அந்த அறிக்கையில், சமீபத்தில் ஒரு நேர்காணலின்போது தெலுங்கு சினிமாவில் எந்த மாதிரியான வேடங்களில் நடிக்க விரும்புகிறீர்கள்? என்று என்னிடத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு, எனக்கு தெலுங்கு சினிமா ரொம்ப பிடிக்கும். எனக்கு விருப்பமான கதாபாத்திரங்கள் கிடைத்தால் நிச்சயமாக நடிப்பேன். உதாரணத்துக்கு புஷ்பா படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்த ஸ்ரீ வள்ளி கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று தான் பதில் கொடுத்திருந்தேன். என்றாலும் துரதிஷ்டவசமாக என்னுடைய பதில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அந்த இடத்தில் அவரை விட நான் நடித்திருந்தால் சிறப்பாக நடித்து இருப்பேன் என்று நான் கூறியது போல் இந்த செய்தி வெளியாகி உள்ளது.

ஆனால் நான் அந்த அர்த்தத்தில் அதற்கான பதிலை சொல்லவில்லை என்று கூறி இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், புஷ்பா படத்தில் நடித்த ராஷ்மிகாவின் கடின உழைப்பை ஒருபோதும் நான் குறை கூறவில்லை. அதனால் அந்த குழப்பத்தை போக்குவதற்காகவே இந்த விளக்கத்தை அளிக்கிறேன். ராஷ்மிகா மீதும், அவரது நடிப்பின் மீதும் எனக்கு பெரிய அளவில் மரியாதை உண்டு என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன் . அதனால் மீடியாக்கள் தொடர்ந்து நான் சொன்ன பதிலை தவறான கோணத்தில் வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சிவகார்த்திகேயன் படப்பிடிப்பிற்கு ஏற்பட்ட புதிய சிக்கல்சிவகார்த்திகேயன் படப்பிடிப்பிற்கு ... குழந்தையின் முகத்தை ரசிகர்களுக்கு காண்பித்த பூர்ணா! குழந்தையின் முகத்தை ரசிகர்களுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)