இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
தமிழ் சினிமாவில் தற்போது பெரும் பட்ஜெட் படங்களை தயாரிக்கும் நிறுவனமான லைகாவிற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையின் அதிரடி சோதனை நடத்தி உள்ளனர்.
கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தடம் பதித்தது லைகா தயாரிப்பு நிறுவனம். ரஜினியின் 2.0, தர்பார், சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன், கமலின் இந்தியன் 2 உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்துள்ளது. அஜித்தின் விடாமுயற்சி, ரஜினியின் 171வது படம் என அடுத்தடுத்து பல படங்களை தயாரிப்பதாக அறிவித்துள்ளது.
இந்த நிறுவனத்தில் சட்ட விரோத பணபரிமாற்றம், வருமான வரி ஏய்ப்பு செய்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் சென்னை தியாகராய நகர், அடையாறு, காரப்பாக்கம் உள்ளிட்ட 8 இடங்களில் சோதனை நடந்துள்ளது. சில முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறையினர் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.