என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

இன்றைய 'பொன்னியின் செல்வன், பாகுபலி' படங்களுக்கெல்லாம் முன்னோடி 'வீரபாண்டிய கட்டபொம்மன்' படம் என்றால் மிகையாகாது. 65 ஆண்டுகளுக்கு முன்பாகவே அப்படி ஒரு பிரம்மாண்டத்தை திரையில் காட்டினார் பி.ஆர்.பந்துலு.
ஜி ராமநாதன் இசையில் சிவாஜிகணேசன், ஜெமினி கணேசன், பத்மினி, எஸ் வரலட்சுமி, ராகினி, விகே ராமசாமி மற்றும் பலர் நடித்து அப்படம் 1959ம் ஆண்டு மே 16ம் தேதி வெளியானது. முழு நீள வண்ணத் திரைப்படமாக வெளிவந்து அன்றைய சினிமா ரசிகர்களை மட்டுமல்லாது இன்றைய சினிமா ரசிகர்களையும் வியக்க வைக்கும் ஒரு படைப்பு. 175 நாட்களுக்கும் மேல் ஓடி வெள்ளி விழா கண்ட படம்.
1960ம் ஆண்டு எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடந்த 155 நாடுகள் பங்கேற்ற ஆசி ஆப்ரோ பட விழாவில் 3 விருதுகளை வென்ற முதல் இந்தியத் திரைப்படம் என்ற பெருமை இந்தப் படத்திற்கு உண்டு. அதில் சிறந்த நடிகர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த வெளிநாட்டுப் படம் ஆகிய விருதுகளை வென்றது. சிறந்த நடிகருக்கான விருது வென்று திரும்பிய சிவாஜிகணேசனை விமான நிலையத்திற்கே சென்று மாலை அணிவித்து வரவேற்றார் எம்ஜிஆர்.
100 முறைக்கும் மேல் நாடகமாக மேடை ஏறி ராஜாஜி, அண்ணாதுரை ஆகியோரால் பாராட்டு பெற்ற 'கட்டபொம்மன்' நாடகம்தான் பின்னர் படமாக உருவானது. சக்தி கிருஷ்ணசாமி இப்படத்திற்கு வசனம் எழுதினார்.
இப்படியெல்லாம் கூட ஒருவரால் நடிக்க முடியுமா என வீரபாண்டிய கட்டபொம்மனை கண்முன் நிறுத்தினார் சிவாஜிகணேசன். இத்தனை ஆண்டுகள் ஆனாலும் அப்படத்தின் வசனங்கள் பலருக்கும் மறக்காமல் இருக்கிறது. வெள்ளையத் தேவனாக ஜெமினி கணேசன், வெள்ளையம்மாளாக பத்மினி, ஜாக்சன் துரை ஆக சிஆர் பார்த்திபன் நடித்தார்கள்.
அந்தக் காலத்திலேயே இப்படி ஒரு படைப்பை எடுக்க முடிந்ததென்றால் அந்தக் கலைஞர்கள் இந்தக் காலத்தில் இருந்திருந்தால் எப்படிப்பட்ட படைப்புகளை எல்லாம் எடுத்திருப்பார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது.