சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? | மகனுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் நயன்தாரா! லைக்ஸ்களை அள்ளும் புகைப்படம்!! | பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் |
சுதீப்தோ சென் என்பவர் இயக்கத்தில் உருவான படம் ‛தி கேரளா ஸ்டோரி'. இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்பட ஐந்து மொழிகளில் கடந்த ஐந்தாம் தேதி திரைக்கு வந்துள்ளது. இப்படம் வெளியாவதற்கு முன்பே வெளியிட அனுமதிக்க கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு பின்னர் நீதிமன்றத்தின் அனுமதியுடன் இப்படம் வெளியானது. அதோடு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பல மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்புடன் திரையிடப்பட்டது. ஆனால் தமிழகம், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் ஓரிரு நாட்கள் திரையிடப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்டது. விமர்சனங்கள், எதிர்ப்புகளை மீறி இப்படம் ரூ.100கோடிக்கும் அதிகமான வசூலை தந்துள்ளது.
தி கேரளா ஸ்டோரி படத்துக்கும், அந்த பட குழுவுக்கும் மிரட்டல்கள் வந்து கொண்டிருந்த நிலையில், அப்பட நாயகியான அடா சர்மா ஒரு விபத்தில் சிக்கியதால் அவர் மீது ஏதேனும் தாக்குதல் நடைபெற்று விட்டதோ என்கிற பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் அது குறித்து அவர் வெளியிட்ட பதிவில், நான் நன்றாக இருக்கிறேன். இந்த விபத்து குறித்து தகவல் பரவியதும் எனக்கு நிறைய மெசேஜ்கள் வந்தது. பெரிய விபத்து எதுவும் இல்லை. அனைவரும் என்மீது கொண்ட அக்கறைக்கு நன்றி. நானும் படக்குழுவும் நன்றாக இருக்கிறோம் என்று பதிவிட்டு பரபரப்புக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அடா சர்மா.