300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
சுதீப்தோ சென் என்பவர் இயக்கத்தில் உருவான படம் ‛தி கேரளா ஸ்டோரி'. இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்பட ஐந்து மொழிகளில் கடந்த ஐந்தாம் தேதி திரைக்கு வந்துள்ளது. இப்படம் வெளியாவதற்கு முன்பே வெளியிட அனுமதிக்க கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு பின்னர் நீதிமன்றத்தின் அனுமதியுடன் இப்படம் வெளியானது. அதோடு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பல மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்புடன் திரையிடப்பட்டது. ஆனால் தமிழகம், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் ஓரிரு நாட்கள் திரையிடப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்டது. விமர்சனங்கள், எதிர்ப்புகளை மீறி இப்படம் ரூ.100கோடிக்கும் அதிகமான வசூலை தந்துள்ளது.
தி கேரளா ஸ்டோரி படத்துக்கும், அந்த பட குழுவுக்கும் மிரட்டல்கள் வந்து கொண்டிருந்த நிலையில், அப்பட நாயகியான அடா சர்மா ஒரு விபத்தில் சிக்கியதால் அவர் மீது ஏதேனும் தாக்குதல் நடைபெற்று விட்டதோ என்கிற பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் அது குறித்து அவர் வெளியிட்ட பதிவில், நான் நன்றாக இருக்கிறேன். இந்த விபத்து குறித்து தகவல் பரவியதும் எனக்கு நிறைய மெசேஜ்கள் வந்தது. பெரிய விபத்து எதுவும் இல்லை. அனைவரும் என்மீது கொண்ட அக்கறைக்கு நன்றி. நானும் படக்குழுவும் நன்றாக இருக்கிறோம் என்று பதிவிட்டு பரபரப்புக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அடா சர்மா.