மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
நடிகை ஜோதிகா தமிழில் முதன்மை கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வருகிறார். தற்போது புதிதாக ஒரு ஹிந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். குயின்', 'சூப்பர் 30' போன்ற படங்களை இயக்கிய விகாஸ் பால் இயக்கும் புதிய படத்தில் நடிகர் அஜய் தேவ்கன் தயாரித்து, நடிக்கிறார். இதில் நடிகர் மாதவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். த்ரில்லர் ஜானரில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் முதல் மும்பை, லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் நடக்கிறது.
இப்போது இந்த படத்தில் நடிகை ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் . கடந்த 1998ம் ஆண்டு வெளிவந்த 'டோலி சாஜா கே ரக்னா' என்ற இந்தி படத்தில் கடைசியாக ஜோதிகா நடித்திருந்தார். இந்த நிலையில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஹிந்தி சினிமாவிற்கு திரும்பியுள்ளார் ஜோதிகா .