300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
நடிகை ஜோதிகா தமிழில் முதன்மை கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வருகிறார். தற்போது புதிதாக ஒரு ஹிந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். குயின்', 'சூப்பர் 30' போன்ற படங்களை இயக்கிய விகாஸ் பால் இயக்கும் புதிய படத்தில் நடிகர் அஜய் தேவ்கன் தயாரித்து, நடிக்கிறார். இதில் நடிகர் மாதவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். த்ரில்லர் ஜானரில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் முதல் மும்பை, லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் நடக்கிறது.
இப்போது இந்த படத்தில் நடிகை ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் . கடந்த 1998ம் ஆண்டு வெளிவந்த 'டோலி சாஜா கே ரக்னா' என்ற இந்தி படத்தில் கடைசியாக ஜோதிகா நடித்திருந்தார். இந்த நிலையில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஹிந்தி சினிமாவிற்கு திரும்பியுள்ளார் ஜோதிகா .