இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
ஓடிடி வந்த பிறகு 'மொழி பாகுபாடு' சினிமாவில் மறைந்துவிட்டது என்று சினிமாவைச் சேர்ந்த சிலர் சொன்னார்கள். ஆனால், அந்தந்த மொழிப் படங்களை அதன் மொழியிலேயே பார்த்து ரசிப்பதைத்தான் பெரும்பாலான சினிமா ரசிகர்கள் விரும்புவார்கள். வேற்று மொழியிலிருந்து தமிழில் டப்பிங் ஆகி வெளியாகும் படங்களைக் கூட ரசிகர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால், இரு மொழியில் படங்களை எடுக்கிறோம் என்று சொல்லிவிட்டு அதில் ஒரு மொழிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தமிழ் ரசிகர்கள் புறக்கணிக்கிறார்கள்.
நேற்று வெளியான 'கஸ்டடி' படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக்கப்பட்ட படம் என்று சொன்னார்கள். ஆனால், கதை நடப்பது முழுவதும் ஆந்திராவில். படத்தின் கதைக்களம், காட்சிகளில் இடம் பெறும் கடைகளின் பலகைகள், என அனைத்திலுமே தெலுங்கு வாசம் மட்டுமே வீசுகிறது. நடிப்பவர்கள் அனைவரும் தமிழில் பேசினால் மட்டும் போதுமா ?, படம் முழுவதுமே தமிழ் வாசம் இருக்க வேண்டமா என்ற கேள்வி எழுகிறது.
இப்படித்தான் இதற்கு முன்பு வெளிவந்த தனுஷ் நடித்த 'வாத்தி', சிவகார்த்திகேயன் நடித்த 'ப்ரின்ஸ்', ராம் பொத்தினேனி நடித்த 'த வாரியர்' ஆகிய படங்களையும் முழுக்க முழுக்க தெலுங்கு பின்னணியுடன் கூடிய தமிழ்ப் படமாகக் கொடுத்ததால் தமிழ் சினிமா ரசிகர்களை முழுமையாக திருப்திப்படுத்தாமல் ஏமாற்றின. அதே நிலைமை தற்போது 'கஸ்டடி' படத்திற்கும் வந்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்தை தெலுங்கிலேயே எடுத்து தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டிருந்தால் கூட ரசிகர்கள் ஏற்றுக் கொண்டிருப்பார்கள். வெங்கட் பிரபுவின் இமேஜும் பாதிக்கப்பட்டிருக்காது என்று மேலும் கூறுகிறார்கள். இனியாவது நம் இயக்குனர்கள் தமிழ், தெலுங்கு என இரட்டை குதிரைகளில் சவாரி செய்ய விரும்பாமல் ஒரு குதிரையில் ஏறி பயணிப்பார்களா ?.