கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி |
நடிகை சம்யுக்தா மலையாள சினிமா மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகி தொடர்ந்து தெலுங்கு, தமிழ் மொழிகளில் தற்போது பிஸியான கதாநாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிகர் சாய் தரம் தேஜ் உடன் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் விருபாக்ஷா. இப்படம் உலகளவில் ரூ. 100 கோடி வசூலை நெருங்குகிறது. இவர் நடித்து தெலுங்கில் வெளிவந்த படங்கள் தொடர் வெற்றியடைவதால் தெலுங்கில் இவரை ராசியான கதாநாயகி என்று அழைக்கின்றனர்.
சமீபத்தில் சம்யுக்தா ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் அவரிடம் உங்களுக்கு ரொம்ப கோபம் வருமாமே என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியது ; "எனக்கு ஒரு சிலரின் நடவடிக்கை சில நேரங்களில் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தும். ஒரு முறை நானும் என் அம்மாவும் வெளியே சென்றோம். அப்போது அங்கு ஒரு நபர் சிகரெட்டை பிடித்து அந்தப் புகையை எங்கள் மீது விட்டுக் கொண்டிருந்தார். எனக்கு சட்டென்று கோபம் வந்துவிட்டது. அதனால் அவர் கன்னத்தில் ஓங்கி பளார் என்று அறை விட்டேன்" என்று தெரிவித்துள்ளார்.