சீரியலிலும் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கு - நிமிஷிகா பளீச் பேட்டி | சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? | மகனுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் நயன்தாரா! லைக்ஸ்களை அள்ளும் புகைப்படம்!! | பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை |
நடிகை சம்யுக்தா மலையாள சினிமா மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகி தொடர்ந்து தெலுங்கு, தமிழ் மொழிகளில் தற்போது பிஸியான கதாநாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிகர் சாய் தரம் தேஜ் உடன் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் விருபாக்ஷா. இப்படம் உலகளவில் ரூ. 100 கோடி வசூலை நெருங்குகிறது. இவர் நடித்து தெலுங்கில் வெளிவந்த படங்கள் தொடர் வெற்றியடைவதால் தெலுங்கில் இவரை ராசியான கதாநாயகி என்று அழைக்கின்றனர்.
சமீபத்தில் சம்யுக்தா ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் அவரிடம் உங்களுக்கு ரொம்ப கோபம் வருமாமே என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியது ; "எனக்கு ஒரு சிலரின் நடவடிக்கை சில நேரங்களில் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தும். ஒரு முறை நானும் என் அம்மாவும் வெளியே சென்றோம். அப்போது அங்கு ஒரு நபர் சிகரெட்டை பிடித்து அந்தப் புகையை எங்கள் மீது விட்டுக் கொண்டிருந்தார். எனக்கு சட்டென்று கோபம் வந்துவிட்டது. அதனால் அவர் கன்னத்தில் ஓங்கி பளார் என்று அறை விட்டேன்" என்று தெரிவித்துள்ளார்.