பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு | பிளாஷ்பேக்: நடிகையின் பிரச்னையை பேசிய முதல் படம் | தமிழில் 4 ஆண்டுக்கு பின் நாயகியாக நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | எனக்கு பாராட்டு விழா வேணாம்: தயாரிப்பாளர் தாணு | வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் | மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சூர்யா ? | 'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? |

தமிழ் சினிமா உலகில் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக இருந்து வருபவர் த்ரிஷா. இதற்கு முன்பு வேறு எந்த ஒரு நடிகையும் இவ்வளவு நீண்ட காலம் முன்னணி நடியாக இருந்ததில்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
2002ம் ஆண்டு வெளிவந்த 'மௌனம் பேசியதே' படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழிலும், தெலுங்கிலும் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர் த்ரிஷா. பல வெற்றிகளைக் குவித்த போது கிடைத்த வரவேற்பு, புகழை விட 'பொன்னியின் செல்வன்' படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்த பிறகு அவருக்கான வரவேற்பு வேறொரு தளத்தில் உச்சத்தைத் தொட்டுவிட்டது.
படம் வெளியாவதற்கு முன்பிருந்த விமர்சனங்களை தனது தோற்றத்தாலும், நடிப்பாலும் தவிடுபொடியாக்கியவர். இன்றுடன் 40 வயதை நிறைவு செய்யும் த்ரிஷாவுக்கு ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். த்ரிஷாவைப் பார்த்தால் 40 வயதை நிறைவு செய்தவர் போலவா இருக்கிறது என நமது தலைப்பிற்கும் ரசிகர்கள் 'கமெண்ட்' செய்ய வாய்ப்புள்ளது.
கடந்த இரண்டு வாரங்களாக 'பொன்னியின் செல்வன் 2' படத்திற்காக 'சோழர்களின் பயணம்' புரமோஷனில் அவர் கலந்து கொண்ட போது விதவிதமான புகைப்படங்களைப் பதிவிட்டிருந்தார். அதற்கே ரசிகர்கள் அமோகமாகப் பாராட்டினார்கள். இன்று அந்தப் புகைப்படங்களுடன் சமூக வலைத்தளங்களின் டைம்லைனில் த்ரிஷா நிறைந்திருக்கிறார்.