இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |
தெலுங்கு திரையுலகில் நடிகர் நாகார்ஜுனாவின் மகனான இளம் நடிகர் நாக சைதன்யா தற்போது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள கஸ்டடி என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க, இளையராஜா-யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். இந்தப்படம் வரும் மே 12ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளை துவங்கியுள்ளனர். குறிப்பாக நாகசைதன்யா இந்த படம் தொடர்பாக யு-டியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்
தமிழில் இர்பான் வியூ என்கிற ஒரு யு-டியூப் சேனலுக்கு அவர் பேட்டியளித்தபோது, அவரிடம் இரண்டரை வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து பெற்று பிரிய முடிவு செய்த பின்னர், நட்பாக இருப்போம் என அவரது மனைவி கூறியது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நாகசைதன்யா பிரிவோம் என முடிவு செய்து பிரிந்த பின்னர் எதற்காக நண்பர்களாக இருக்க வேண்டும்..? பிரிந்த பின் நண்பர்களாக தொடர்வோம் என்று கூறும் வார்த்தையே என்னை அதிகம் கடுப்படிக்கிறது அப்படி ஒரு நட்பு தேவையில்லை” என்று பதில் அளித்துள்ளார்.