300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
நடிகர் விஷ்ணு விஷால் நடித்து கடந்த 2015ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‛இன்று நேற்று நாளை'. மியா ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ரவிக்குமார் இயக்கினார். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தயாரிப்பாளர் சி.வி.குமார் முடிவு செய்துள்ளார். இதை தொடர்ந்து விஷ்ணு விஷால் உடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வந்த நிலையில் ஒரு சில காரணங்களால் விஷ்ணு விஷால் இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.
இந்த நிலையில் இந்த படத்தில் இப்போது இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஹிப் ஹாப் ஆதி கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். இந்த படத்தை இயக்குனர் ரவிக்குமாரின் உதவி இயக்குனர் இயக்கவுள்ளார். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.