மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
நடிகர் விஷ்ணு விஷால் நடித்து கடந்த 2015ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‛இன்று நேற்று நாளை'. மியா ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ரவிக்குமார் இயக்கினார். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தயாரிப்பாளர் சி.வி.குமார் முடிவு செய்துள்ளார். இதை தொடர்ந்து விஷ்ணு விஷால் உடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வந்த நிலையில் ஒரு சில காரணங்களால் விஷ்ணு விஷால் இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.
இந்த நிலையில் இந்த படத்தில் இப்போது இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஹிப் ஹாப் ஆதி கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். இந்த படத்தை இயக்குனர் ரவிக்குமாரின் உதவி இயக்குனர் இயக்கவுள்ளார். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.