லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
தமிழ் சினிமாவின் பெருமைமிகு தயாரிப்பு நிறுவனம் ஏவிஎம். இந்த நிறுவனத்தை ஏவி மெய்யப்ப செட்டியார் துவங்கி திறம்பட நடத்தி தமிழ் சினிமாவை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றார். இவருக்கு அடுத்து இவரின் மகன் ஏவிஎம் சரவணன்(83) அந்த பொறுப்பை ஏற்று ஏராளமான படங்களை தயாரித்தார். கடந்த பல ஆண்டுகளாக தயாரிப்பை விட்டு இந்நிறுவனம் ஒதுங்கி உள்ளது. இருப்பினும் இந்நிறுவனத்தின் அடுத்த தலைமுறையினர் மீண்டும் படத் தயாரிப்பில் ஈடுபட எண்ணி உள்ளனர்.
இந்நிலையில் வீட்டில் முழுக்க முழுக்க ஓய்வெடுத்து வரும் ஏவிஎம் சரணவனை அவரது இல்லத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார். இந்த போட்டோவில் சரவணன் கையில் பேண்ட் கட்டப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு கையில் அடிபட்டு இருக்கலாம் என தெரிகிறது. அதற்காக அவரை சந்தித்து முதல்வர் நலம் விசாரித்து இருக்கலாம். இந்த சந்திப்பின்போது சரவணன் குடும்பத்தினர் உடன் இருந்தனர். இதுதொடர்பான போட்டோக்கள் வெளியாகி உள்ளன.
நன்றி சொன்ன பேத்தி
‛‛அன்புடன் எங்கள் இல்லம் வந்து தாத்தாவின் உடல் நலம் விசாரித்ததற்கு மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு என் சார்பிலும், என் குடும்பத்தினர் சார்பிலும் மிக்க மகிழ்ச்சியுடன் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என ஏவிஎம் சரவணனின் பேத்தி அருணா குகன் தெரிவித்துள்ளார்.