பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வருகிற 28ம் தேதி வெளிவருகிறது. தற்போது இதன் புரமோசன் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொன்னியின் செல்வன் கீதத்தை (ஆன்தம்) இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கியுள்ளார்.
இதன் வெளியீட்டு விழா நடந்தது. அண்ணா பல்கலைக்கழகத்தில் 6000 மாணவர்களிடையே வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி கலந்து கொண்டனர்.
விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் பேசியதாவது: நான் இதுவரை கல்லூரிக்குச் சென்றதில்லை, எதிர்கால இந்தியாவாக இருக்கப்போகும் இங்குள்ள கூட்டத்தைப் பார்த்து பயப்படுகிறேன். ஆரம்பத்தில் இந்த கீதத்தை உருவாக்கியதன் பின்னணியில் எந்த உள்நோக்கமும் இல்லை. மணிரத்னம் சார் இந்த ஆல்பத்தை இயக்கும்படியாக ஒரு பாடலை விரும்பினார். அப்போதுதான் இந்த கீதம் உருவாகியது. என்றார்.