பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
அமெரிக்காவின் 100 ஆண்டு கால பாரம்பரியம் மிக்க 'டைம்' பத்திரிகை 2023ம் ஆண்டின் உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில் 'ஐகான்ஸ்' பட்டியலில் ஷாரூக்கானும், 'பயோனிர்ஸ்' பட்டியலில் ராஜமவுலியும் இடம் பெற்றுள்ளனர். ராஜமவுலி பற்றி 'ஆர்ஆர்ஆர்' படத்தில் நடித்த ஹிந்தி நடிகை ஆலியா பட் கூறியதையும் வெளியிட்டுள்ளார்கள். “பாகுபலி 2' படத்தின் பிரிவியூ காட்சியில்தான் ராஜமவுலியை நான் முதன் முதலாகச் சந்தித்தேன். படத்தைப் பார்த்து நாங்கள் அனைவரும் வியந்து போனோம். படத்தைப் பார்க்கும் போது எனக்கு 'ஓ மை காட்' இந்த இயக்குனருடன் பணியாற்றுவது எவ்வளவு கனவாக இருக்கும் எனத் தோன்றியது. அந்தக் கனவு நனவும் ஆனது.
'ஆர்ஆர்ஆர்' படத்தில் அவருடைய இயக்கத்தில் நடித்தது மீண்டும் பள்ளிக்குச் சென்ற உணர்வை ஏற்படுத்தியது. அவருக்கான ரசிகர்களுக்கு எப்படி சேவை செய்ய வேண்டும் என்பதை அவர் தெரிந்து வைத்திருந்தார். ஹிட் அடிக்க என்ன செய்ய வேண்டும், எதை எடுக்க வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். நான் அவரை 'கதை சொல்வதில் மாஸ்டர்' என்று அழைப்பேன். கதைகளைத் திறமையாகக் கையாள்வதிலும், தேவையற்றதைக் கைவிடுவதிலும் நேர்மையாக நேசிப்பார். அவர் நம்மை ஒன்று சேர்க்கிறார். இந்தியா பல்வேறு மக்கள், கலாச்சாராம், சரனை கொண்ட பெரிய நாடு. ஆனால், திரைப்படங்கள் மூலம் நம்மை ஒன்று சேர்த்து அவர் அதைப் பெற்றுவிடுகிறார்.
நான் ஒரு முறை அவரிடம் நடிப்பு பற்றி அட்வைஸ் கேட்டேன். “நீங்கள் எதைத் தேர்வு செய்தாலும் அதை அன்புடன் செய்யுங்கள். படம் வெற்றி பெறவில்லை என்றாலும், உங்கள் கண்களில் உள்ள அந்த அன்பை, ரசிகர்கள் உங்களிடம் பார்ப்பார்கள்,” என்றார்,” என ஆலியா குறிப்பிட்டுள்ளார்.
ஷாரூக்கான் பற்றி தீபிகா படுகோனே, “ஷாரூக்கானை முதன் முதலில் சந்தித்ததை என்னால் மறக்க முடியாது. கனவுகளுடனும், ஒரு சூட்கேஸுடனும் பெங்களூரிலிருந்து மும்பைக்கு வந்ததேன். அடுத்து எனக்குத் தெரிந்தது அவரது வீட்டில் நான் அமர்ந்திருந்தது, ஒரு படத்தில் அவருக்கு ஜோடியாக நான் நடிக்க பரிசீலிக்கப்பட்டேன். 16 ஆண்டுகள் ஆகிவிட்டது. எங்களுக்கு இடையிலான உறவில் என்ன சிறப்பு என்று கேட்டால் அன்பு, நம்பிக்கை, ஒருவர் மீது மற்றவர் வைத்துள்ள மரியாதை.
எல்லா காலத்திலும் சிறந்த நடிகர்களில் ஒருவராக ஷாரூக்கான் அறியப்படுவார். ஆனால், உண்மையில் அவரை வேறுபடுத்துவது அவரது மனம், அவரது வீரம், அவரது தாராள மனப்பான்மை என பட்டியல் நீளும். அவருடன் நெருங்கிப் பழகி, அவரைப் பற்றிய ஆழ்ந்த அக்கறை கொண்ட ஒருவருக்கு 150 வார்த்தைகளில் அவரது பெருமையச் சொல்லிவிட முடியாது,” எனத் தெரிவித்துள்ளார்.