படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் | ஜுனியர் என்டிஆருக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண் | தெலுங்கு பட ஷூட்டிங்கில் ரச்சிதா மகாலெட்சுமி | 'சத்யா' காட்சியைப் பகிர்ந்து கவியூர் பொன்னம்மாவுக்கு கமல்ஹாசன் இரங்கல் | சுதா சந்திரன் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் குழுவினர் | சீக்கிரமே அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிடுவேன் - ராஜலெட்சுமி பேட்டி | 160 படங்களைக் கடந்த 2024 ரிலீஸ், 6 படங்கள் மட்டுமே 100 கோடி வசூல் | வித்தியாசமா கூவுறாங்க! மணிமேகலை வெளியிட்ட நறுக் வீடியோ | சீரியலிலும் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கு - நிமிஷிகா பளீச் பேட்டி | சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? |
இசை அமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படம் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது அதன் இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனியே தயாரித்து, இயக்கி, இசை அமைத்து, நடித்து வருகிறார். இந்த படம் முதலில் நாளை வெளிவருதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அது தள்ளி வைக்கப்பட்டது.
இந்தநிலையில், இந்த படத்துக்கு தடை கேட்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் மாங்காடு மூவிஸ் பட நிறுவனம் சார்பில் ராஜகணபதி என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதில், “பாண்டியராஜன் நடித்த ஆய்வுக்கூடம் என்ற படத்தை 2016ம் ஆண்டு தயாரித்து வெளியிட்டோம். அந்த படத்தின் கதையை எங்களிடம் கேட்காமல், பிச்சைக்காரன் 2 என்ற தலைப்பில் விஜய் ஆண்டனி எடுத்துள்ளார். இதற்கு தடை விதிக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜய் ஆண்டனி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த திரைப்படம் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியாக உள்ளதாக மனுதாரர் கூறியுள்ளார். ஆனால், மே மாதம்தான் இந்த திரைப்படத்தை வெளியிட உள்ளோம். எனவே, தடை எதுவும் பிறப்பிக்க வேண்டாம்'' என்று கோரிக்கை வைத்தார். இதையடுத்து, விசாரணையை வருகிற 18ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.