பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
இசை அமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படம் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது அதன் இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனியே தயாரித்து, இயக்கி, இசை அமைத்து, நடித்து வருகிறார். இந்த படம் முதலில் நாளை வெளிவருதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அது தள்ளி வைக்கப்பட்டது.
இந்தநிலையில், இந்த படத்துக்கு தடை கேட்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் மாங்காடு மூவிஸ் பட நிறுவனம் சார்பில் ராஜகணபதி என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதில், “பாண்டியராஜன் நடித்த ஆய்வுக்கூடம் என்ற படத்தை 2016ம் ஆண்டு தயாரித்து வெளியிட்டோம். அந்த படத்தின் கதையை எங்களிடம் கேட்காமல், பிச்சைக்காரன் 2 என்ற தலைப்பில் விஜய் ஆண்டனி எடுத்துள்ளார். இதற்கு தடை விதிக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜய் ஆண்டனி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த திரைப்படம் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியாக உள்ளதாக மனுதாரர் கூறியுள்ளார். ஆனால், மே மாதம்தான் இந்த திரைப்படத்தை வெளியிட உள்ளோம். எனவே, தடை எதுவும் பிறப்பிக்க வேண்டாம்'' என்று கோரிக்கை வைத்தார். இதையடுத்து, விசாரணையை வருகிற 18ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.