பிளாஷ்பேக் : மோகன் கையில் மைக்கை கொடுத்த இயக்குனர் | பிளாஷ்பேக் : மறக்கடிக்கப்பட்ட மகா கலைஞன் கொத்தமங்கலம் சீனு | 'மார்கோ' படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பகூடாது : மத்திய தணிக்கை வாரியத்துக்கு கேரள அதிகாரி கடிதம் | கோவில்களில் சினிமா பாட்டு பாட நீதிமன்றம் தடை | சிங்கமுத்து மீதான வழக்கு : வடிவேலு நீதிமன்றத்தில் ஆஜர் | பிளாஷ்பேக்: “இதயக்கனி” திரைப்படத்தின் இறுதிக்கட்ட சண்டைக் காட்சியின் பின்னணி | லண்டனில் சிம்பொனி இசை ; இது என் பெருமை அல்ல... நாட்டின் பெருமை : இளையராஜா | அஜித், கமல்ஹாசன் வழியில் நயன்தார : அடுத்தது யார் ? | படக்குழு மட்டும் கொண்டாடிய 'டிராகன்' சக்சஸ் பார்ட்டி | இயக்குனரின் குற்றச்சாட்டுக்கு அனஸ்வரா ராஜன் பதிலடி ; நடிகர் சங்கத்திலும் புகார் கொடுத்தார் |
கதிரேசன் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில், ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடித்துள்ள 'ருத்ரன்' படம் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இப்படத்தின் ஹிந்தி மற்றும் வட இந்திய மொழிகளின் டப்பிங் உரிமையை வாங்கியிருந்த ரெவன்சா குளோபல் வென்சர்ஸ் என்ற நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து படத்திற்கு இடைக்காலத் தடை உத்தரவை வாங்கியுள்ளது.
12 கோடியே 25 லட்ச ரூபாய்க்கு தயாரிப்பாளருக்கும், ரெவன்சா நிறுவனத்திற்கும் இடையே ஏற்கெனவே ஒப்பந்தம் போடப்பட்டிருந்ததாம். ரெவன்சா நிறுவனம் 10 கோடி முன்பணத்தையும் கொடுத்துவிட்டார்களாம். ஆனால், தயாரிப்பு தரப்பு மேற்கொண்டு 4 கோடியே 50 லட்சம் கேட்டு, அதை ரெவன்சா நிறுவனம் தர மறுத்ததால் ஒப்பந்தத்தை 'ருத்ரன்' தயாரிப்பாளர் ரத்து செய்துவிட்டாராம். எனவே தான் வழக்கு தொடர்ந்துள்ளார்கள். அதை விசாரித்த நீதிமன்றம் ஏப்ரல் 24 வரை படத்தை வெளியிட தடை விதித்துள்ளது.
'ருத்ரன்' படத்திற்காக தமிழகத்தில் தியேட்டர்கள் பலவும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ள நிலையில் தற்போது இடைக்காலத் தடை காரணமாக திட்டமிட்டபடி ஏப்ரல் 14ம் தேதி வெளியாகாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் தயாரிப்பாளருக்கும், ரெவன்சா நிறுவனத்திற்கும் பேச்சு வார்த்தை நடந்து, சுமூகத் தீர்வு ஏற்பட்டால் மட்டுமே படம் வெளியாகும். இரண்டு நாளில் அது நடக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.