கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
பாரதிராஜாவுடன் அருள்நிதி இணைந்து நடித்திருக்கும் படம் 'திருவின் குரல்'. அறிமுக இயக்குனர் ஹரிஷ் பிரபு இயக்கி இருக்கிறார், அருள்நிதி ஜோடியாக ஆத்மிகா நடித்திருக்கிறார், சாம் சி.எஸ். இசை அமைத்திருக்கிறார். வருகிற 14ம் தேதி படம் வெளிவருகிறது. லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
படம் குறித்து அருள்நிதி கூறியதாவது: த்ரில்லர் கதைகளையே தேர்வு செய்து நடிப்பதாக ஒரு குற்றச்சாட்டு இருந்தது. அதை மாற்ற வேண்டும் என்று யோசித்தபோதுதான் இந்த படத்தின் கதை வந்தது. இதில் நான் வாய்பேச முடியாத செவித்திறன் குறைபாடு நிறைந்த இளைஞனாக நடித்திருக்கிறேன். பிருந்தாவனம் படத்திலும் இப்படி ஒரு கேரக்டரில் நடித்திருந்தேன். அந்த படத்தில் நடிக்க பயிற்சி அளித்த விஜயாதான் இந்த படத்திற்கும் பயிற்சி கொடுத்தார்.
ஆனால் கதை முற்றிலும் வித்தியாசமானது. கதைப்படி எனது அப்பாவுக்கு (பாரதிராஜா) திடீரென்று உடல்நலம் சரியில்லாமல் போக அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறேன். அங்கு எனக்கும், ஆஸ்பத்திரியில் உள்ளவர்களுக்கு இடையில் உருவாகும் ஈகோ பிரச்சினைதான் கதை. ஆத்மிகா எனது அத்தை மகளாக நடித்திருக்கிறார்.
எனது நடிப்பு திறமையை முழுமைகாக வெளிக்கொண்டு வர இந்த படம் வாய்ப்பளித்திருக்கிறது. அரசு மருத்துவமனையில் உள்ள சில மனிதாபிமானமற்ற மனிதர்கள், சாதாரண மக்களை அரசு மருத்துவமனைகள் எவ்வாறு நடத்துகின்றனர். என்பதை இயல்பாக சொல்கிற படமாக உருவாகி இருக்கிறது. என்றார்.