300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் மே பத்தாம் தேதி நடைபெற உள்ளது. இதன் காரணமாக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அங்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரபல நடிகரான கிச்சா சுதீப் சில தினங்களுக்கு முன்பு கர்நாடக பாஜகவுக்கு ஆதரவாக தான் பிரச்சாரம் செய்ய போவதாக அறிவித்திருந்தார். இப்படியான நிலையில் தற்போது கர்நாடகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதனால் போலீசார் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் சென்னையில் இருந்து மும்பைக்கு காரில் கொண்டு செல்லப்பட்ட 39 லட்சம் மதிப்பிலான வெள்ளிப் பொருட்களை கர்நாடக போலீசார் பறிமுதல் செய்துள்ளார்கள். அதையடுத்து நடந்த விசாரணையின் போது அந்த கார் தயாரிப்பாளர் போனி கபூருக்கு சொந்தமானது என்பது தெரிவந்துள்ளது. அதையடுத்து அந்த வெள்ளி பொருட்களுக்கான உரிய ஆவணங்களை கொடுத்துவிட்டு எடுத்துச் செல்லுமாறு தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.