பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் மே பத்தாம் தேதி நடைபெற உள்ளது. இதன் காரணமாக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அங்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரபல நடிகரான கிச்சா சுதீப் சில தினங்களுக்கு முன்பு கர்நாடக பாஜகவுக்கு ஆதரவாக தான் பிரச்சாரம் செய்ய போவதாக அறிவித்திருந்தார். இப்படியான நிலையில் தற்போது கர்நாடகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதனால் போலீசார் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் சென்னையில் இருந்து மும்பைக்கு காரில் கொண்டு செல்லப்பட்ட 39 லட்சம் மதிப்பிலான வெள்ளிப் பொருட்களை கர்நாடக போலீசார் பறிமுதல் செய்துள்ளார்கள். அதையடுத்து நடந்த விசாரணையின் போது அந்த கார் தயாரிப்பாளர் போனி கபூருக்கு சொந்தமானது என்பது தெரிவந்துள்ளது. அதையடுத்து அந்த வெள்ளி பொருட்களுக்கான உரிய ஆவணங்களை கொடுத்துவிட்டு எடுத்துச் செல்லுமாறு தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.