பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

அஜித் நடிப்பில் எஸ்.ஜே.சூர்யா அறிமுக இயக்குனராக இயக்கிய படம் வாலி. அஜித்தின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையாக அமைந்ததுடன் எஸ்.ஜே. சூர்யாவுக்கு திரையுலக வெற்றிக் கதவை திறந்துவிட்ட படமாகவும் இது அமைந்தது. மிகப்பெரிய வெற்றிபெற்ற அந்தப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யும் உரிமையை தயாரிப்பாளரும் நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் வாங்கியுள்ளார்.
ஆனால் இதற்கு முன்பே தனது அனுமதி இல்லாமல் அந்தப்படத்தை போனி கபூர் ரீமேக் செய்யக்கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார் எஸ்ஜே சூர்யா. இதற்கிடையே போனி கபூர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ததில் இந்தப்படத்தின் ஹிந்தி ரீமேக்கை ஆரம்பிப்பதில் போனி கபூருக்கு எந்த தடையும் இல்லை என தீர்ப்பு அளிக்கப்பட்டது.
தற்போது போனி கபூர் இந்தப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யும் முயற்சியிலும் இறங்கியுள்ளார். அதனால் இதை தடுத்து நிறுத்தும் விதமாக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடிவு செய்துள்ளாராம் எஸ்.ஜே.சூர்யா. இந்தப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்வதற்கு எஸ்ஜே சூர்யா ஏற்கனவே திட்டமிட்டிருந்தார். ஒன்று அஜித் அந்த ரீமேக்கில் நடிக்க வேண்டும், அவர் நடிக்காத பட்சத்தில் தானே அந்த படத்தில் நடிக்க வேண்டும் என்றுதான் தீர்மானித்து வைத்திருந்தாராம் எஸ்ஜே சூர்யா.
வாலி படத்தின் தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி அதன் ஹிந்தி ரீமேக் உரிமையை போனி கபூருக்கு கொடுத்து விட்டாலும், ரீமேக் ஒப்பந்தத்தில் ஸ்க்ரிப்ட் ரைட்டராக எஸ்ஜே சூர்யாவின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளதாம். அதனால் அவர் அனுமதி இல்லாமல் இந்தப்படத்தை ரீமேக் செய்ய முடியாது என்பதுதான் சூர்யா தரப்பினர் வாதம்.
ஏற்கனவே ஆரண்ய காண்டம் பட தயாரிப்பாளர்கள் இதேபோன்ற விஷயத்தில் இறங்கியபோது, அதன் ஸ்கிரிப்ட் ரைட்டரான தியாகராஜன் குமாரராஜாவுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதையே மேற்கோள்காட்டி உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரலாம் என முடிவு செய்துள்ளாராம் எஸ்ஜே சூர்யா.