அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் வலிமை படம் ஜனவரி 13-ஆம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஒமைக்கிறான் பரவல் காரணமாக திரையரங்குகளில் 50% பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு கட்டுப்பாடு விதித்திருக்கிறது. இரவுநேர ஊரடங்கு, ஞாயிறு அன்று முழு ஊரடங்கு போன்றவையும் விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர், பிரபாஸின் ராதே ஷ்யாம் போன்ற படங்களின் ரிலீஸ் தேதிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. அதனால் அஜித்தின் வலிமை பொங்கலுக்கு திட்டமிட்டபடி வெளியாகுமா? இல்லை ரிலீஸ் தேதியில் ஏதேனும் மாற்றம் ஏற்படுமா என்ற செய்திகளும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் வலிமை படத்தை வெளியிடுவதில் எந்த சிக்கலும் இருக்காது. அதே சமயம் வேறு ஏதேனும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் மட்டுமே ரிலீசில் மாற்றத்தை கொண்டு வர வேண்டிய சூழல் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதனால் வலிமை தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.