மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் வலிமை படம் ஜனவரி 13-ஆம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஒமைக்கிறான் பரவல் காரணமாக திரையரங்குகளில் 50% பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு கட்டுப்பாடு விதித்திருக்கிறது. இரவுநேர ஊரடங்கு, ஞாயிறு அன்று முழு ஊரடங்கு போன்றவையும் விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர், பிரபாஸின் ராதே ஷ்யாம் போன்ற படங்களின் ரிலீஸ் தேதிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. அதனால் அஜித்தின் வலிமை பொங்கலுக்கு திட்டமிட்டபடி வெளியாகுமா? இல்லை ரிலீஸ் தேதியில் ஏதேனும் மாற்றம் ஏற்படுமா என்ற செய்திகளும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் வலிமை படத்தை வெளியிடுவதில் எந்த சிக்கலும் இருக்காது. அதே சமயம் வேறு ஏதேனும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் மட்டுமே ரிலீசில் மாற்றத்தை கொண்டு வர வேண்டிய சூழல் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதனால் வலிமை தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.