மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையான சமந்தா, அவருடைய முதல் தெலுங்குப் பட கதாநாயகனான நாக சைதன்யாவைக் காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். சில வருடங்கள் கணவன் மனைவியாக வாழ்ந்தவர்கள் பின்னர் பிரிந்தனர்.
பிரிவுக்குப் பின்னரும் சில தெலுங்கு ஊடகங்கள் அவர்களைப் பற்றிய வதந்திகள், பொய்ச் செய்திகள் ஆகியவற்றை பரப்பி வருகின்றன. ஒரு இணையதளம் ஒன்று சமந்தா சொன்னதாகச் சொல்லி ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது.
நாக சைதன்யா, 'பொன்னியின் செல்வன்' படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடிக்கும் சோபிதா துலிபலாவைக் காதலிப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதைப் பற்றி, “யார் யாருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தாலும் எனக்குக் கவலையில்லை,” என சமந்தா சொன்னதாக அந்த இணையதளம் செய்தி வெளியிட்டது.
அந்த செய்தியைப் பகிர்ந்து, “ நான் எப்போதும் அப்படி சொன்னதில்லை,” என சமந்தா பதிலடி கொடுத்துள்ளார். சமந்தாவின் பதிவுக்கு ரசிகர்கள் பலரும் லைக்குகளையும், ரிடுவீட்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர்.