ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
கடந்த ஒருவாரமாகவே இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மெல்ல அதிகரித்து வருகிறது. இந்திய முழுக்க பாதிப்பு நாலாயிரத்தை தாண்டி இருப்பதாக தகவல் வெளியானது. அதோடு தமிழகத்திலும் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை இயக்குனர் கூறுகையில், தமிழகத்தில் கொரோனா பரவல் அதிக அளவில் இல்லை என்பதால் பெரிய கட்டுப்பாடுகள் தற்போதைக்கு தேவையில்லை. என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைவரும் மாஸ்க் அணிவது கட்டாயம் ஆகிறது. ஏற்கனவே மருத்துவமனைகளில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், திரையரங்கங்கள், ஏசி அரங்கங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளின்போது அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் இனிமேல் தியேட்டர்களுக்கு செல்லும் ரசிகர்கள் கட்டாயமாக மாஸ்க் அணிந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிகிறது.