அஜித்தின் 65வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | கூலி படத்தில் பஹத் பாசிலுக்கு உருவாக்கப்பட்ட வேடத்தில் சவுபின் ஷாகிர் | எந்த கூட்டணி அமையும்? யாராச்சும் உறுதிப்படுத்துங்கப்பா | சூப்பர் குட் பிலிம்ஸ் 100வது படத்தில் நடிப்பது யார்? | 'தண்டட்டி' இயக்குனர் படத்தில் கவின் | அந்த மொட்டை யார் தெரியுமா? : கல்யாணி பகிர்ந்த சுவாரசிய போட்டோ | ஆவேசம் பட இயக்குனரின் கதையில் புதிய படம் இயக்கும் மஞ்சும்மேல் பாய்ஸ் இயக்குனர் | மோகன்லாலின் ‛ஹிருதயபூர்வம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | மோகன்லால் நடித்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வடிவேலு | நான் வேடிக்கையாக தான் பேசினேன் : லோகேஷ் கனகராஜிடம் வருத்தம் தெரிவித்த சஞ்சய் தத் |
கடந்த ஒருவாரமாகவே இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மெல்ல அதிகரித்து வருகிறது. இந்திய முழுக்க பாதிப்பு நாலாயிரத்தை தாண்டி இருப்பதாக தகவல் வெளியானது. அதோடு தமிழகத்திலும் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை இயக்குனர் கூறுகையில், தமிழகத்தில் கொரோனா பரவல் அதிக அளவில் இல்லை என்பதால் பெரிய கட்டுப்பாடுகள் தற்போதைக்கு தேவையில்லை. என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைவரும் மாஸ்க் அணிவது கட்டாயம் ஆகிறது. ஏற்கனவே மருத்துவமனைகளில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், திரையரங்கங்கள், ஏசி அரங்கங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளின்போது அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் இனிமேல் தியேட்டர்களுக்கு செல்லும் ரசிகர்கள் கட்டாயமாக மாஸ்க் அணிந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிகிறது.