ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‛லியோ' படத்தில் நடித்து வருகிறார். அவருடன் திரிஷா, சஞ்சய் தத், கவுதம் மேனன், பிரியா ஆனந்த், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து முடிந்துள்ளது. தற்போது சென்னை திரும்பி உள்ள படக்குழு ஓய்வில் உள்ளனர். விரைவில் சென்னையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு துவங்க உள்ளது.
இந்நிலையில் சென்னையை சேர்ந்த அபிதா பேகம் என்ற சிறுமி நடிகர் விஜய்யை பார்க்க வேண்டும் என அடம்பிடித்த காட்சியை அவரது குடும்பத்தார், வீடியோவாக பதிவு செய்து சமூகவலைதளத்தில் வெளியிட்டனர். இந்த வீடியோ விஜய்யின் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து நடிகர் விஜய், அச்சிறுமியை போனில் தொடர்பு வீடியோ காலில் பேசினார். மேலும் அவரது குடும்பத்தாரிடமும் கலந்துரையாடினார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.




