படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் | ஜுனியர் என்டிஆருக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண் | தெலுங்கு பட ஷூட்டிங்கில் ரச்சிதா மகாலெட்சுமி | 'சத்யா' காட்சியைப் பகிர்ந்து கவியூர் பொன்னம்மாவுக்கு கமல்ஹாசன் இரங்கல் | சுதா சந்திரன் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் குழுவினர் | சீக்கிரமே அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிடுவேன் - ராஜலெட்சுமி பேட்டி | 160 படங்களைக் கடந்த 2024 ரிலீஸ், 6 படங்கள் மட்டுமே 100 கோடி வசூல் | வித்தியாசமா கூவுறாங்க! மணிமேகலை வெளியிட்ட நறுக் வீடியோ | சீரியலிலும் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கு - நிமிஷிகா பளீச் பேட்டி | சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? |
ராஜமவுலி இயக்கத்தில் உருவான ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு என்ற பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது. இந்த படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசை அமைத்திருந்தார். இந்நிலையில் தற்போது அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ஆஸ்கார் விருது பெற்ற நாட்டு நாட்டு பாடலை தனுஷ் எழுதிய பாடிய ஒரு பாடலுடன் ஒப்பிட்டு இருக்கிறார். அதாவது ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் 3. இந்த படத்தில் தான் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார். இப்படத்தில் தனுஷ் எழுதி பின்னணி பாடிய ஒய் திஸ் கொலவெறி என்ற பாடல் உலக அளவில் ஹிட் அடித்தது. இந்தப் பாடல் வரிகள் மிகச் சிறப்பாகவும் எளிமையாகவும் இருந்ததாக குறிப்பிட்டுள்ள கீரவாணி, தனுஷ் எழுதிய அந்த பாடலைப் போலவே நாட்டு நாட்டு பாடலையும் பாடலாசிரியர் சந்திரபோஸ் எழுதியிருக்கிறார் என்று ஒய் திஸ் கொலவெறி பாடலுடன் ஆஸ்கர் விருது பெற்ற நாட்டு நாட்டு பாடலை ஒப்பிட்டு அந்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.