ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
ராஜமவுலி இயக்கத்தில் உருவான ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு என்ற பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது. இந்த படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசை அமைத்திருந்தார். இந்நிலையில் தற்போது அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ஆஸ்கார் விருது பெற்ற நாட்டு நாட்டு பாடலை தனுஷ் எழுதிய பாடிய ஒரு பாடலுடன் ஒப்பிட்டு இருக்கிறார். அதாவது ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் 3. இந்த படத்தில் தான் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார். இப்படத்தில் தனுஷ் எழுதி பின்னணி பாடிய ஒய் திஸ் கொலவெறி என்ற பாடல் உலக அளவில் ஹிட் அடித்தது. இந்தப் பாடல் வரிகள் மிகச் சிறப்பாகவும் எளிமையாகவும் இருந்ததாக குறிப்பிட்டுள்ள கீரவாணி, தனுஷ் எழுதிய அந்த பாடலைப் போலவே நாட்டு நாட்டு பாடலையும் பாடலாசிரியர் சந்திரபோஸ் எழுதியிருக்கிறார் என்று ஒய் திஸ் கொலவெறி பாடலுடன் ஆஸ்கர் விருது பெற்ற நாட்டு நாட்டு பாடலை ஒப்பிட்டு அந்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.