ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! | ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? | 'குட் பேட் அக்லி' வினியோகஸ்தருக்கே 'ஜனநாயகன்' வினியோக உரிமை? | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அனுராதா | பிளாஷ்பேக்: இரட்டை சகோதரிகளாக நடித்த மாதுரி தேவி | ''பணம் கொட்டிக்கிடக்கு... எங்களுக்கு பணத்தாசை இல்லை'': ராயல்டி விவகாரத்தில் கங்கை அமரன் 'பளீச்' | புற்றுநோய் பாதிப்பு: உதவி கேட்கும் சூப்பர்குட் சுப்பிரமணி | தேங்கி கிடந்த 'சுமோ' ஏப்., 25ம் தேதி திரைக்கு வருகிறார் |
ராஜமவுலி இயக்கத்தில் உருவான ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு என்ற பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது. இந்த படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசை அமைத்திருந்தார். இந்நிலையில் தற்போது அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ஆஸ்கார் விருது பெற்ற நாட்டு நாட்டு பாடலை தனுஷ் எழுதிய பாடிய ஒரு பாடலுடன் ஒப்பிட்டு இருக்கிறார். அதாவது ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் 3. இந்த படத்தில் தான் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார். இப்படத்தில் தனுஷ் எழுதி பின்னணி பாடிய ஒய் திஸ் கொலவெறி என்ற பாடல் உலக அளவில் ஹிட் அடித்தது. இந்தப் பாடல் வரிகள் மிகச் சிறப்பாகவும் எளிமையாகவும் இருந்ததாக குறிப்பிட்டுள்ள கீரவாணி, தனுஷ் எழுதிய அந்த பாடலைப் போலவே நாட்டு நாட்டு பாடலையும் பாடலாசிரியர் சந்திரபோஸ் எழுதியிருக்கிறார் என்று ஒய் திஸ் கொலவெறி பாடலுடன் ஆஸ்கர் விருது பெற்ற நாட்டு நாட்டு பாடலை ஒப்பிட்டு அந்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.