ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
யசோதா படத்தை அடுத்து தற்போது சாகுந்தலம் என்ற படத்தில் நடித்துள்ளார் சமந்தா. இந்த படத்தின் கதை மற்றும் கதாபாத்திரம் குறித்து அவர் கூறுகையில், இந்த சாகுந்தலம் படத்தின் கதையை இயக்குனர் என்னிடத்தில் சொன்னபோது அதில் என்னால் நடிக்க முடியாது என்று கூறிவிட்டேன். காரணம் சாகுந்தலம் கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு பயமாக இருந்தது. எனக்குள் அந்த கம்பீரம், தேஜஸ் இருக்காது என்று நினைத்தேன். என்றாலும் இயக்குனர் என்னை வற்புறுத்தி அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். அதோடு எனது கதாபாத்திரம் எதிர்பார்த்தது போலவே சிறப்பாக வந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் நம்மால் நடிக்க முடியாது என்ற பயம் எனக்குள் ஏற்பட்டாலும், அந்த கதாபாத்திரத்தில் நடித்து வெற்றி பெற்று காட்ட வேண்டும் என்றும் நான் எனக்குள் ஒரு முடிவு செய்து கொள்வேன். என்னுடைய பயத்தை தாண்டி வெற்றி பெற முயற்சி செய்வேன். என்னுடைய வாழ்க்கையில் பல விஷயங்களில் இப்படித்தான் நான் செயல்பட்டு வந்திருக்கிறேன். ஒரு நடிகையாக எனது முன்னேற்றத்திற்கு காரணமே இந்த பயம்தான் என்றும் தெரிவித்திருக்கிறார் சமந்தா.