ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி | இறுதிக்கட்டத்தில் 'கேர்ள் பிரண்ட்' : முதல் பாடல் வெளியீடு | புதுமுகங்களின் 'தி கிளப்' | பிளாஷ் பேக்: தயாரிப்பாளர் ஆன எஸ்.எஸ்.சந்திரன் | பிளாஷ்பேக்: மலையாளத்தின் முதல் சூப்பர் ஸ்டார் | விக்ரம், பிரேம்குமார் கூட்டணி உருவானது எப்படி | ரஜினி, கமல் இணைவார்களா? : காலம் கனியுமா? | காளிதாஸ் 2 வில் போலீசாக நடித்த பவானிஸ்ரீ | 2040ல் நடக்கும் ‛ரெட் பிளவர்' கதை |
'புஷ்பா 'படத்தின் மூலம் இந்தியா முழுக்க பிரபலமான நடிகராகிவிட்ட அல்லு அர்ஜூன், தற்போது புஷ்பா இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். அடுத்து அவர் நடிக்கும் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிசீரிஸ் பிலிம்ஸ் புரொடக்ஷன் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. சந்தீப் ரெட்டி வங்கா இயக்குகிறார்.
இந்த அறிவிப்பை தயாரிப்பாளர் பூஷண் குமார், பிரனய் ரெட்டி வங்கா, இணை தயாரிப்பாளர் ஷிவ் சனானா, அல்லு அர்ஜூன் இணைந்து வெளியிட்டனர். இதுவும் பெரிய பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக தயாராக இருக்கிறது. அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கி 2025ம் ஆண்டு வெளியாகும் என்கிறார்கள். இது ஸ்டைலிசான ஹாலிவுட் ஹீரோக்கள் பாணியிலான படம் என்கிறார்கள். தற்போது புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜூன் நடித்து வருகிறார். இந்த படத்தின் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிந்து அடுத்த ஆண்டின் துவக்கத்தில் வெளியாகிறது.