மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
பாலா இயக்கத்தில் நந்தா, பிதாமகன் போன்ற படங்களில் நடித்த சூர்யா அதையடுத்து வணங்கான் படத்தில் கமிட்டாகி முதல் கட்ட படப்பிடிப்பிலும் நடித்து வந்தார். இந்த படத்தில் தெலுங்கு நடிகை கிர்த்தி ஷெட்டி நாயகியாக ஒப்பந்தமாகி இருந்தார். இந்நிலையில் முதல் கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்று வந்த நிலையில் அப்படத்தின் கதை தனக்கு பிடிக்காததால் படத்தில் இருந்து விலகிக் கொண்டார் சூர்யா. இதையடுத்து பாலா வெளியிட்ட அறிக்கையில், நானும் சூர்யாவும் கலந்து பேசி வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகிக் கொள்வது என்று முடிவெடுத்து இருக்கிறோம். இதில் எங்களுக்கு வருத்தம் தான். என்றாலும் சூர்யாவின் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு இது என்று கூறியிருந்தார் பாலா.
இந்த நிலையில் தற்போது வணங்கான் படத்தில் சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜய் நடிக்க கமிட்டாகி உள்ளாராம். இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 9ம் தேதி மீண்டும் கன்னியாகுமரியில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இதேப்போல் நாயகி கிர்த்தி ஷெட்டியும் விலகிவிட்டதாகவும் அவருக்கும் பதில் வேறு ஒருவர் நடிப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.