நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பாலா இயக்கத்தில் நந்தா, பிதாமகன் போன்ற படங்களில் நடித்த சூர்யா அதையடுத்து வணங்கான் படத்தில் கமிட்டாகி முதல் கட்ட படப்பிடிப்பிலும் நடித்து வந்தார். இந்த படத்தில் தெலுங்கு நடிகை கிர்த்தி ஷெட்டி நாயகியாக ஒப்பந்தமாகி இருந்தார். இந்நிலையில் முதல் கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்று வந்த நிலையில் அப்படத்தின் கதை தனக்கு பிடிக்காததால் படத்தில் இருந்து விலகிக் கொண்டார் சூர்யா. இதையடுத்து பாலா வெளியிட்ட அறிக்கையில், நானும் சூர்யாவும் கலந்து பேசி வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகிக் கொள்வது என்று முடிவெடுத்து இருக்கிறோம். இதில் எங்களுக்கு வருத்தம் தான். என்றாலும் சூர்யாவின் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு இது என்று கூறியிருந்தார் பாலா.
இந்த நிலையில் தற்போது வணங்கான் படத்தில் சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜய் நடிக்க கமிட்டாகி உள்ளாராம். இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 9ம் தேதி மீண்டும் கன்னியாகுமரியில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இதேப்போல் நாயகி கிர்த்தி ஷெட்டியும் விலகிவிட்டதாகவும் அவருக்கும் பதில் வேறு ஒருவர் நடிப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.