இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் அனுஷ்கா. 'பாகுபலி' படத்திற்குப் பிறகு நிறைய படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 'பாகமதி, சைலன்ஸ்' என இரண்டே படங்களில் மட்டுமே நடித்தார். தற்போது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவர் நடிக்க உள்ள படம் பற்றி நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.
பிரபாஸ் குடும்பத்தினருக்குச் சொந்தமான யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் இப்படத்தைத தயாரிக்கிறது. மகேஷ்பாபு இயக்கும் இந்தப் படத்திற்கு 'மிஸ் ஷெட்டி, மிஸ்டர் பொலிஷெட்டி' என பெயர் வைத்துள்ளார்கள். அனுஷ்கா கதாநாயகியாக நடிக்க, நவின் பொலிஷெட்டி கதாநாயகனாக நடிக்கிறார்.
லண்டனில் வசிக்கும் அனுஷ்காவுக்கும், ஐதராபாத்தில் வசிக்கும் நவினுக்கும் இடையிலான நகைச்சுவை கலந்த படமாக இந்தப் படத்தை உருவாக்கி வருகிறார்களாம். இந்த ஆண்டு கோடை விடுமுறையில் இப்படம் வெளியாகிறது என்றும் தெரிவித்துள்ளார்கள்.