பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் அனுஷ்கா. 'பாகுபலி' படத்திற்குப் பிறகு நிறைய படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 'பாகமதி, சைலன்ஸ்' என இரண்டே படங்களில் மட்டுமே நடித்தார். தற்போது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவர் நடிக்க உள்ள படம் பற்றி நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.
பிரபாஸ் குடும்பத்தினருக்குச் சொந்தமான யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் இப்படத்தைத தயாரிக்கிறது. மகேஷ்பாபு இயக்கும் இந்தப் படத்திற்கு 'மிஸ் ஷெட்டி, மிஸ்டர் பொலிஷெட்டி' என பெயர் வைத்துள்ளார்கள். அனுஷ்கா கதாநாயகியாக நடிக்க, நவின் பொலிஷெட்டி கதாநாயகனாக நடிக்கிறார்.
லண்டனில் வசிக்கும் அனுஷ்காவுக்கும், ஐதராபாத்தில் வசிக்கும் நவினுக்கும் இடையிலான நகைச்சுவை கலந்த படமாக இந்தப் படத்தை உருவாக்கி வருகிறார்களாம். இந்த ஆண்டு கோடை விடுமுறையில் இப்படம் வெளியாகிறது என்றும் தெரிவித்துள்ளார்கள்.