என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

நடிகை சமந்தா மயோசிடிஸ் என்கிற தசை அழற்சி நோய் பாதிப்பில் இருந்து மீண்டு தற்போது 'சிட்டாடல்' என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். இது ஹாலிவுட்டில் தயாராகும் தொடர். அங்கு பிரியங்கா சோப்ரா நடிக்கிறார். இந்தியன் வெர்ஷனில் சமந்தா நடிக்கிறார். மும்பையில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் சமந்தாவுக்கு சண்டை காட்சிகள் உள்ளன.
இந்த தொடருக்காக குதிரையேற்ற பயிற்சி செய்த சமந்தா. சண்டை பயிற்சியும் எடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் நடந்த சண்டை காட்சியின்போது அவரது கைகளில் காயம் ஏற்பட்டது. அந்த படத்தை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள சமந்தா “இதையெல்லாம் பார்த்து நான் அஞ்சப்போவது இல்லை.. எனது கையில் ஏற்பட்டுள்ள காயங்களை நான் ஆபரணமாக கருதுகிறேன்” என்ற பதிவையும் பகிர்ந்துள்ளார்.
ஏற்கெனவே 'தி பேமிலி மேன் 2' வெப் தொடரில் அதிரடி சண்டை காட்சியில் நடித்திருந்த சமந்தா. சமீபத்தில் வெளிவந்த 'யசோதா' படத்திலும் சண்டை காட்சிகளில் நடித்திருந்தார். இப்போது மீண்டும் தனது அதிரடி ஆக்ஷனை தொடங்கி இருக்கிறார். அடுத்து குஷி படத்திலும் நடிக்க உள்ளார். இவர் நடித்துள்ள சாகுந்தலம் படம் வெளியாக உள்ளது.