சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் என மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன் -மீனாட்சி தம்பதி மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை கடந்த 2017ம் ஆண்டு மதுரை ஐகோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டது. ஆனால், தனுஷ் தரப்பில் தாக்கல் செய்த பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் போலியானவை. இதற்காக அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று மதுரை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கதிரேசன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதை எதிர்த்து கதிரேசன் தம்பதிகள், மதுரை ஐகோர்ட்டில் குற்றவியல் சீராய்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ஏற்கனவே இந்த விவகாரம் குறித்த முந்தைய வழக்கு விசாரணையின் போது நடிகர் தனுஷ் மதுரை ஐகோர்ட்டில் ஆஜரானார். அப்போது அவரது உடலில் மச்சங்கள், தழும்புகள் போன்றவற்றை அரசு டாக்டர்கள் சரி பார்த்தனர். அந்த சமயத்தில் மதுரை ஐகோர்ட்டு பதிவாளராக நான் பணியாற்றியதால் இந்த வழக்கை தொடர்ந்து நான் விசாரிப்பது சரியாக இருக்காது. எனவே வேறு அமர்வுக்கு இந்த வழக்கை பரிந்துரைக்கிறேன். என்று கூறினார். இதை தொடர்ந்து இந்த வழக்கு வேறு நீதிபதி முன்பு விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.