ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' | ஓடிடியில் நேரடி படங்கள், வெப் தொடர்கள் அறிவிப்பு | நடிப்பில் விக்ரமை வெல்ல தொடர்ந்து போராடுவேன்: துருவ் விக்ரம் | அம்மாவின் பச்சை நிற கண்ணை பெற்ற அழகான மகள்: அக்ஷராவுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து | பிளாஷ்பேக்: கதை நாயகனாக முதல் படத்தில் தோற்ற எஸ்.எஸ்.ராஜேந்திரன் |
நடிகர் திலகம் சிவாஜியின் கலை வாரிசு, 250 படங்களுக்கு மேல் நாயகனாக நடித்தவர் பிரபு. கடந்த 21ம் தேதி திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைனில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீரகக் தில் கல் அடைப்பு இருப்பதாகவும், அதற்காக சிசிக்சை செய்யப்படுவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.
தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த பிரவுக்கு லேசர் அறுவை சிகிச்சை மூலம் கல் அடைப்பு நீக்கப்பட்டுவிட்டதாகவும் தற்போது அவர் பூரண குணமடைந்து விட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. இதை தொடர்ந்து பிரபு நேற்று அன்னை இல்லம் திருப்பினார். அவரை ஆரத்தி எடுத்து குடும்பத்தினர் வரவேற்றனர். வீட்டில் ஒரு வாரம் வரை ஓய்வெடுக்க இருக் கும் பிரபு. பின்னர் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள இருக்கிறார்.